தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 63 - பிந்து வினோத்
63. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பாரதி அவளுக்கு கொஞ்சமாக சாதமும் சாம்பாரும் எடுத்துக் கொண்டாள்! மதுவிடம் பேசிக் கொண்டே சாப்பிட்டதால் மனபாரங்கள் தெரியவில்லை! சாப்பிட்டு முடித்ததும், மதுவிற்கு மீண்டும் நன்றி சொல்லி, அவளை அவள் ரூமிற்கு அனுப்பி விட்டு, பாரதி அவர்களின் அறைக்குள் நுழைந்தாள்.
அங்கே விவேக் கோபத்துடன் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தான்!
பாரதி அறைக்குள் வந்து கதவை சாத்திய அடுத்த வினாடி, “இப்போ உனக்கு திருப்தி தானே?” என்றான் விவேக் கோபமாக!
பாரதிக்கு மனதில் இருந்த வருத்தத்தையும் மீறி அலுப்பாக இருந்தது!
“என்ன?” அவளின் குரலிலும் அலுப்பு தெரிந்தது!
“உன் சப்போர்ட்டுக்கு அப்பாவை தயார் செய்றீயா?”
விவேக் பாரதியின் குரலில் இருந்த மாற்றத்தை கவனித்தோ கவனிக்காமலோ கத்த, பாரதி அவனை தன் கூரிய விழிகளால் பார்த்துக் கொண்டே,
“நீங்க ரொம்ப புத்திசாலி தான்! என் கிட்ட வந்து பேசினது நீங்க... பக்கத்தில் யார் இருக்காங்கன்னு பார்த்துட்டு கத்தனும்... என்ன ஏதுன்னு பார்க்காம காட்டு கத்தல் போட்டா,” என்றாள் அமைதியானக் குரலில்!
“அப்படி நீ எங்கே போன?”
விவேக் மனதில் இருந்த உணர்வுகளை காட்டிக் கொள்ளாமல் இருக்க பெரு முயற்சி செய்துக் கொண்டே அந்தக் கேள்வியை கேட்டான்... !
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக பாரதியை காணாமல் அவன் பட்ட பாடு அவனுக்கு தானே தெரியும்!