தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 64 - பிந்து வினோத்
64. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
"சாரி பவி... உன் கிட்ட எதையும் சொல்லாம மறைக்கனும்னு நான் நினைக்கலை... எனக்கு நிறைய குழப்பம் இருக்கு... பல பல கேள்விகள் இருக்கு..."
"சாரி எல்லாம் வேண்டாம் பாரு... எனக்கு உன்னை தெரியும்... நீ சொல்ல வந்ததை சொல்லு..."
“ம்ம்ம்... அதுக்கு முன்னாடி உனக்கு என்ன விஷயம் தெரியும்னு சொல்லு...”
பவித்ரா உமா தன்னிடம் சொன்னதை சுருக்கமாக சொன்னாள்.
"உமாவுக்கு உங்க இரண்டுப் பேருக்குள்ளே எதுக்கு சண்டை... எதனால திடீர்னு நீங்க வித்தியாசமா நடந்துக்குறீங்கன்னு புரியலை... அதனால தான் எனக்கு ஃபோன் செய்தாங்க..."
“அவங்களை தப்பு சொல்ல முடியாது பவி... எனக்கே என்ன சொல்றதுன்னு தெரியலை... விவேக் கொஞ்ச நாளாவே ரொம்ப வித்தியாசமாக நடந்துக்குறார்... என்னன்னு கேட்டா, விஸ்வநாதன் சார் கிட்ட இருந்த என்னோட பணம் அவர் கைக்கு வர தான் நடிச்சு என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்னு சொல்றார்...”
தொடர்ந்து, கடந்த ஒன்றரை மாதங்களாக நடப்பதை சுருக்கமாக தோழியிடம் பகிர்ந்துக் கொண்டாள் பாரதி.
“விவேக்கா? என்னால நம்பவே முடியலை பாரு!”
“ம்ம்ம்... என்னாலேயும் தான் நம்ப முடியலை!”
“விவேக்கா இப்படி??? அன்னைக்கு உன்னை நல்ல படியா வச்சு பார்த்துப்பேன்னு பெரிய பெரிய டையலாக் எல்லாம் சொன்னாரே... ச்சே... மனுஷங்க எப்படி எல்லாம் இருக்காங்க!! நீ ஏன் பாரு இன்னும் அங்கேயே இருக்க?”
“வேற என்ன செய்ய சொல்ற பவி? கதையில், சினிமால வர மாதிரி உடனே பெட்டியை எடுத்துட்டு வேற ஊருக்கு வேலை தேடிட்டுப் போக சொல்றீயா?”