தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
43. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
காஞ்சனா கூர்மையான விழிகளால் இந்துவையே பார்த்துக் கொண்டிருந்தாள்...
இந்து எஸ்.ஏ இன்டஸ்ட்ரீஸ் என்ற பெரிய நிறுவனத்தையே தனியாளாக முன் நின்று நடத்துபவள் என்பதால் சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டாள்! காஞ்சனாவின் கேள்வி தன்னை பாதிக்கவில்லை என்ற பாவனையில்,
"என்ன ஆன்ட்டி திடீர்னு இப்படி ஒரு கேள்வி கேட்குறீங்க," என இயல்பாகவே கேட்டாள்!
ஆனால் காஞ்சனா அதை எல்லாம் ஏற்றுக் கொள்வதாக இல்லை!
"இந்து, நான் தான் சொன்னேனே... நாம சுத்தி வளைக்காம நேரடியாவே பேசிடுவோம்... என் கேள்விக்கு பதில் சொல்லு... "
இந்து இப்போது மறுக்கவில்லை... காஞ்சனா சொன்னதை ஏற்றுக் கொள்பவளாக, சரி என தலை அசைத்தாள்! ஆனால், உண்மையில் அவளுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை!!!
சில வினாடிகள் காத்திருந்த காஞ்சனா, பின் அவளே பேசினாள்!
"இந்து, நீ எனக்கு பதில் சொல்லலை... ஆனால், நீ இப்படி அமைதியா இருக்குறதுல இருந்தே என்னால புரிஞ்சுக்க முடியுது... இந்த உங்களுடைய காதல் எல்லாம் சரியா வரும்னு உனக்கு தோணுதா?"
இந்துவிற்கு ஆச்சர்யமாக இருந்தது!
"ஏன் ஆன்ட்டி இப்படி கேட்குறீங்க?" அவளின் கேள்வியிலும் ஆச்சர்யம் கலந்திருந்தது!
"இந்து, சஞ்சீவ் இப்போ கொஞ்ச நாளா ரொம்பவே மாறி இருக்கான்... அது எனக்குப் புரியுது... அதுக்கு நான் உனக்கு தான் நன்றி சொல்லனும்னும் தெரியுது... ஆனால், எங்க குடும்பத்துக்கும் உனக்கும் சரிப் பட்டு வருமான்னு தான் தெரியலை... ரொம்ப யோசிக்கனும்...."