மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 52 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
சத்யாவிடம், “சிஸ்டர், நல்ல டைமுக்கு வந்தீங்க. ஃபர்ஸ்ட் ஏய்ட் வேண்டாம்னு உங்க ஃப்ரென்ட் அடம் பிடிக்குறாங்க. அவங்க கையை பிடிங்க,” என்றான் சாந்ததுரை
“இந்த போலி டாக்டர் பார்வையே சரி இல்லை சத்யா. என்னோட வா, நாம வேற டாக்டர் கிட்ட போவோம்,” என்றாள் சக்தி.
“நான் போலி டாக்டரா?? அநியாயமா இருக்கு!” சாந்ததுரை அலுத்துக் கொண்டான்!
சக்தியும் சாந்ததுரையும் விடாமல் பேசிக் கொண்டே போக, சத்யா அவர்கள் பேச்சின் நடுவில் குறுக்கிட்டாள்.
“உங்க இரண்டு பேருக்கும் சண்டைப் போட நல்ல டைம் கிடைச்சது. சக்தி, எத்தனை இடத்துல உனக்கு அடிப் பட்டு இருக்கு! இவரு வேண்டாம்னா வேற டாக்டர் கிட்ட போவோம். ஆம்புலன்ஸ் இருக்கு. வா!” சத்யா சக்தியின் கையை பிடித்து அழைத்தாள்!
சக்தி உடனே சத்யாவுடன் கிளம்பினாள்.
“போங்க போங்க, அங்கேயும் நான் தான் வருவேன்,” என்றான் சாந்ததுரை!
“அடிப்பட்டிருக்கும் போது சைட் அடிக்கும் காதலை இப்போ தான் பார்க்கிறேன். கடவுளே இன்னும் என்ன எல்லாம் நான் பார்க்க வேண்டி இருக்குமோ!” சத்யா இரண்டுப் பேருக்கும் கேட்பதுப் போல புலம்பினாள்.
சாந்ததுரை மந்தகாசத்துடன் சிரித்தான். சக்தியோ கோபப்பட்டாள்!
“சத்யா, காதல் மண்ணாங்கட்டின்னு எல்லாம் சொன்ன, எனக்கு கோபம் வரும்!”
“நான் எதுவும் சொல்லலை. நீ வாயை மூடிட்டு ஹாஸ்பிடலுக்கு வா. அங்கே போய் உனக்கு ட்ரீட்மென்ட் கொடுத்ததுக்கு அப்புறம், பிரசாத் எப்படி இந்த சேகரன் கேஸ்ல வந்தார்ன்னு எனக்கு சொல்லு!”