தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 72 - பிந்து வினோத்
72. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பவித்ரா சொல்லி முடித்த அடுத்த வினாடியே பாரதி படபட என பேசினாள்...
“நோ பவி, அப்படி எல்லாம் இருக்காது... அவருக்கு அப்பப்போ தலைவலி வரும், அவ்வளவு தான்... மத்தப்படி எதுவும் இல்லை... அவர் ரொம்பவே ஹெல்த் கான்ஷியன்ஸ் இருக்கவர் வேற... அவர் இப்போ கொஞ்ச நாளா தான் வித்தியாசமா இருக்கார் மத்தப்படி ரொம்பவே நல்லவர்...”
தோழிக்கு அவசரமாக பதில் சொன்னப் போதும், பாரதிக்கே அவள் பேச்சு கொஞ்சம் அபத்தமாக தான் இருந்தது! நல்லவர்களுக்கு எந்த நோயும் வராமல் இருக்கிறதா என்ன?
ஆனால் அப்படி எல்லாம் எதுவும் இருக்காது... இருக்க கூடாது...
பாரதியின் முகத்தில் இருந்தே அவளின் மனதை புரிந்துக் கொண்டவர்கள் போல பவித்ராவும், லாவண்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, பேச்சை மாற்ற முயன்றார்கள்!
“நீ சொல்றதும் கரக்ட் தான் பாரதி... என்னவா இருக்கும்ன்னு இப்படி யோசிச்சுட்டே இருக்குறதுக்கு பதில் இவங்க... லாவண்யாவை விவேக் கிட்ட பேச சொல்றது தான் சரி,” என பவித்ரா சொல்ல,
“ஆமாம் பாரதி, நீங்க இப்படி அதுவா இதுவான்னு எல்லாம் குழம்பாதீங்க... நான் இன்னைக்கே விவேக் கிட்ட பேசுறேன்... அவனையே உங்க கிட்ட பேச சொல்றேன்... இல்லன்னா என்னன்னு தெரிஞ்சுட்டு நானே உங்களுக்கு ஃபோன் செய்றேன்...” என்றாள் லாவண்யா!
“தேங்க்ஸ் லாவண்யா... டைம் கிடைக்கும் போது அவரோட பேசுங்க...” என்ற பாரதி அவளின் மொபைல் நம்பரை லாவண்யாவிடம் கொடுத்தாள்.
🌼🌸❀✿🌷
லாவண்யாவிடம் விடைப் பெற்று அந்த அலுவலக வளாகத்தை விட்டு பாரதியும், பவித்ராவும் வெளியே வந்தார்கள்.... அதன் பிறகு சில நிமிடங்கள் ஆன பின்பும் பாரதி அமைதியாக