தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 18 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
கிருத்திகா விஜயை போல சட்டென்று ‘சீரியஸ் மோட்’டிற்கு மாறாமல், “ப்ச்...” என அலுத்துக் கொண்டாள்!
“சொல்லும்மா...” என்றான் விஜய் கனிவுடன்!
“எனக்கு இங்கே இருக்க பிடிக்கலை...”
“பிடிக்கலையா???? “
“ஆமாம், இங்கே இருக்க சுத்தமா பிடிக்கலை...”
“அவ்வளவு தானா, பக்கத்து ரூமுல போய் பேசலாம்...”
கிருத்திகா, கீதா இருவரும் விஜயை பார்த்து முறைத்தார்கள்.
“எப்போ எதுல விளையாடுறதுன்னு உங்களுக்கு ஒரு விவஸ்தையே இல்லை...” என கணவனை கடிந்துக் கொண்ட கீதா, கிருத்திகாவிடம், “பிரின்சஸ், அவரை விடு! என் கிட்ட சொல்லு, என்ன விஷயம்? தியாகு அண்ணா எதாவது கோபமா சொன்னாரா? அவர் அப்படி எல்லாம் கோபப் படுறவர் இல்லையே...” என்றாள்!
“ஆமாம், அவரு கோபமே படாதவர்!!!!” கிருத்திகாவின் கோபம் மிகவும் வெளிப்படையாக தெரிந்தது!
விஜயும் கீதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்!
“ஏன் பிரின்சஸ், என்ன ஆச்சு?” என்று கீதா கேட்க, விஜயும் விளையாட்டைக் கை விட்டு,
“சொல்லும்மா...” என்றான் அக்கறையுடன்!
“அவருக்கு வேற ஒரு பொண்ணோட அஃபேர் இருக்காம்...”