தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 17 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“சரி நாங்க கிளம்புறோம்மா!”
உறவினர்கள் புடை சூழ நின்ற கிருத்திகாவிடம் நெகிழ்ந்த குரலில் சொன்னான் வெற்றி. அவனின் வருத்தம் முகத்தில் வெளிப்படையாகவே தெரிந்தது!
வெற்றிக்கு கிருத்திகாவின் மீதிருக்கும் பாசம் புரிய, அவனை பரிவுடன் அணைத்துக் கொண்டான் விஜய்.
“வெற்றி, இந்த ஃபீலிங்க்ஸ் எல்லாம் எதுக்கு? அவ எப்போவுமே உங்க தங்கை நிலாவே தான்...”
அதுவரை நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த மிருதுளா, கிருத்திகாவிடம், “போயிட்டு வரேன்...” என்றாள்.
“ம்ம்ம்... சரி... போயிட்டு ஃபோன் செய்ங்க...” என்ற கிருத்திகாவின் முகத்தில் சுரத்தில்லை ஆனால் குரலில் வருத்தம் துளியும் இல்லை!!!
“என்ன நீ, எப்போடா கிளம்புவேன்னு காத்திருந்த மாதிரி சொல்ற?” மிருதுளா குரலை தழைத்துக் கொண்டு ரகசியமாக கேட்டாள்!
“உங்களுக்கு நான் தொல்லை... எனக்கு நீங்க...” கிருத்திகாவும் அவளைப் போலவே ரகசியக் குரலில் பதில் சொன்னாள்!
“அடிப்பாவி...!”
“நான் உண்மையை தானே சொல்றேன்...!”
“சொல்வீங்கம்மா சொல்வீங்க...”
“போதும் இந்த பொய்யான சென்டிமென்ட் டையலாக் எல்லாம்... எனக்கு உங்களை தெரியாதா??? இந்த தனிமைக்கு தானே ரொம்ப நாளாக ஆசைப்பட்டாய் பாலக்குமாரி... கோ