மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 08 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“உனக்கு என்ன ஆச்சு ப்ரியம்வதா? எனக்கு தெரிஞ்ச ப்ரியம்வதாவா இல்லாம, காளி அவதாரம் எடுத்த ப்ரியம்வதாவா மாறிப் போயிருக்க? சரி, உன் கல்யாண பேச்சை விட்ருவோம். உன் வேலை பத்தி பேசுவோம். நீ ஏன் வேற வேலை தேடக் கூடாது? அப்படி ஒரு புது வேலை தேடிட்டு அம்மாவை உன் கூட அழைச்சுட்டுப் போயிடு. இந்த மாதிரி காட்டுக்கு நடுவுல வந்து உட்கார்ந்திருக்க வயசா உனக்கு?”
“அப்போ நீ ஏன் வந்து உட்கார்ந்திருக்க? எனக்கும் உனக்கும் நாலு வருஷம் தான் வித்தியாசம்?”
சிணுங்கிக் கொண்டு சொன்ன ப்ரியம்வதாவை அவனையும் அறியாமல் ரசித்தான் வினாயக்.
“நாலு வருஷம் கிடையாது, நமக்கு மூணு வருஷம் ஆறு மாசம் தான் வித்தியாசம்!”
“பொண்ணுங்க மாதிரி இதெல்லாம் மட்டும் கரக்ட்டா சொல்லு!”
“வேற எதை நான் கரக்ட்டா செய்யலை? நான் ஸ்மார்ட் பெர்சன் ப்ரியம்வதா. எதுவா இருந்தாலும் கப்புன்னு கண்டுப்பிடிச்சுடுவேன்”
“நீதானே! ஆமாமா உடனே கண்டுப்பிடிச்சிடுவ!” மக்கு, மடையா, என்றெல்லாம் மனசுக்குள் பிரியமாக சேர்த்து சொன்னாள் ப்ரியம்வதா!
“என்னை நானே அதிகமா புகழ்ந்து சொல்லிக்க கூடாது. அது தப்பு. நாம வேற பேசுவோம். ஐஸ்வர்யாவை உனக்கு ஏன் பிடிக்கலை அதை சொல்லு,” என பேச்சை மாற்றினான் வினாயக்.
“பிடிக்கலை! அவ்வளவு தான். அதோட விடு!”
“உனக்கு ஒன்னு பிடிக்கலைன்னு நீ சொல்லும் போது எனக்கு அதிசயமா இருக்கு. சந்திர மௌலிக்கு கூட மரியாதை கொடுத்து தானே பேசுவ?”
“ஐஸ்வர்யாவை சுத்தமா பிடிக்கலைன்னு இல்ல வினாயக். அவ ஒரு நச் நச்சுன்னு இம்சை