மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 09 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
தென்றல்வாணனின் முகத்தில் கேள்வி வந்தது! அதைப் புரிந்துக் கொண்டு கலைவாணி விளக்கம் கொடுத்தாள்.
"கட்டாயம் வினாயக் அதெல்லாம் செய்திருக்க மாட்டார் இன்ஸ்பெக்டர். எங்க தோட்டத்துல இருக்க செடில பூச்சி வந்து ஒரே தொல்லை பண்ணிட்டு இருந்துது. அதுக்கு பூச்சிக்கொல்லி அடிக்க போனப்போ வினாயக் தடுத்துட்டார். பாவம் அப்படி சாகடிக்காதீங்கன்னு சொல்லிட்டு, அந்த செடி பக்கத்துல என்னமோ அல்ட்ரா சவுண்டாமே அது வரதா எதையோ வச்சார். இப்போ பூச்சி எதுவும் இல்லை. எல்லாமே பறந்துப் போயிடுச்சு. ஒரு பூச்சியை கொல்ல மாட்டேன்னு சொல்றவரா மனுஷங்க உயிர் பத்தி கவலைப் படாம இருப்பார்?"
"நீங்க சொல்றதைப் பார்த்தா நல்லவர்ன்னு தான் தோணுது மேடம். உங்க மக அவருக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்களே. என்ன அவருக்கு?"
"அதை ஏன் கேட்குறீங்க! எங்க எஸ்டேட் உள்ளே எங்கேயோ மயக்கம் போட்டு விழுந்துட்டார். உங்களுக்கே தெரியும் இந்த எஸ்டேட் உள்ளே எப்படி காடு போல இருக்கும்னு! எங்க யாருக்கும் வழி எல்லாம் தெளிவா தெரியாது. நாங்க எல்லாம் இவர் எங்கேன்னு தேடாத இடமில்லை. மயக்கம் தெளிஞ்சு அவரே வர வரைக்கும் கண்டே பிடிக்க முடியலை"
"டாக்டர் என்ன சொன்னார்?"
"செக் செய்து பார்த்துட்டு பயப்படுற மாதிரி ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டார்."
"அப்போ சரி!"
அப்போது கலைவாணி வந்த திசைக்கு எதிர் பக்கம் இருந்து வேகமாக ஒரு ஆடி கார் வந்தது. பேசிக் கொண்டிருந்த இவர்கள் இருவரின் அருகில் வரும் போது வேகத்தை குறைத்தது. அந்த கார் வந்த திசையை வைத்து, அது ஊரில் இருந்து எஸ்டேட் உள்ளே வருவதை தென்றல்வாணன் புரிந்துக் கொண்டான்.
வேகத்தை குறைத்த கார் ப்ரேக் போட்டு அங்கேயே நின்றது. அதில் இருந்து ராகுலும்,