(Reading time: 9 - 17 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்

  

55. மனம் விரும்புதே உன்னை... உன்னை...

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

வீணா இந்துவை பார்த்து ஒரு முறை முறைத்தாள்! எவ்வளவு முயன்றும் அவளால் கோபத்தை அடக்க முடியவில்லை!

   

“நீ மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க இந்து? பெரிய நோபல் ப்ரைஸ் ஏதாவது வாங்கனும்னு ப்ளானா??”

   

இந்து உடனடியாக பதில் எதுவும் சொல்லவில்லை! அவளின் கண்ணோரம் இருந்து பெரிய நீர் துளி ஒன்று கன்னத்தில் வழிந்தது! அதை நாசுக்காக விரல்களால் சுண்டி விட்டாள்! சோர்வுடன் பக்கத்தில் இருந்த ஷோஃபாவில் அமர்ந்தாள்!

   

வீணா இந்துவை சில வினாடிகள் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்! அவளுக்கு இந்துவை கிட்டத்தட்ட ப்ரீ ஸ்கூல் முதலே தெரியும்! ஸ்கூல் நாட்கள், டீன் ஏஜ் நாட்கள், காலேஜ் நாட்கள், அதற்கு பிறகு இந்து கம்பெனி எம்.டி ஆக இருந்த நாட்கள் என எத்தனையோ பரிமாணங்களில் இந்துவை பார்த்திருக்கிறாள்! ஆனால், இப்போது அவளின் கண் முன் நிற்கும் இந்து அவை அனைத்திலும் இருந்து முற்றிலுமாக மாறுப்பட்டு தெரிந்தாள்!

   

இந்துவிற்கு சஞ்சீவின் மீதிருக்கும் காதல் மீது வீணாவிற்கு எந்த சந்தேகமும் இல்லை! அதை வாய் விட்டு அவனிடம் சொல்வதில் அவளுக்கு என்ன பிரச்சனை என்று தான் அவளுக்கு புரியவில்லை!

   

“எந்த ப்ராப்ளம் வந்தாலும் பார்த்துக்கலாம்னு அன்னைக்கு பெரிய டையலாக் எல்லாம் சொன்னீயே இந்து? இப்போ சஞ்சீவோட அம்மா வந்து ஒரு வார்த்தை சொல்றதுக்கு முன்னாடி இப்படி ரிவர்ஸ்ல போற?? நமக்கு ஒன்னு வேணும்னா நாம தான் அது எனக்கு வேணும்னு வாயை திறந்து சொல்லனும்!”

   

வீணா தன் பாணியில் கோபத்துடன் படபடக்க, இந்து இப்போதும் அமைதியாகவே இருந்தாள்!

   

“என்ன, கீதா அக்கான்னு சொல்லப் போற அதானே??? கீதா அக்கா லைஃபை அவங்களே பார்த்துப்பாங்க, அதுக்கு மேலேயும் ஹெல்ப் வேணும்னா ராஜீவ் அவங்களுக்கு இருக்காரு! நீ ஒன்னும் பெரிய சாக்ரிஃபைஸ் எல்லாம் செய்ய வேண்டாம்! உன் மனசுல நீ என்ன

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.