தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 76 - பிந்து வினோத்
76. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பாரதி அசையாமல், எதுவும் பேசாமல், விவேக்கின் அணைப்பில் சில நிமிடங்கள் இருந்தாள். விவேக்கும் அவளை போன்ற மனநிலையில் இருந்ததாலோ என்னவோ, அவனுமே அவளை அணைத்தப்படி அமைதியாக தான் இருந்தான்! ஆனால், பாரதிக்கு தெரிந்துக் கொள்ள சில விபரங்கள் இருந்தன!
அவளுடைய விவேக் தான் அவளிடம் மீண்டும் வந்து விட்டானே அதை எல்லாம் கேட்காமல் அப்படியே விட்டு விடலாமா என்ற யோசனை அவளுக்கு தோன்றியது. ஆமாம், இல்லை என்று விவாதம் செய்தவள், ஒரு முடிவுக்கு வர முடியாமல்,
“ஆனந்த்...” என்றாள் மென்மையாக!
அவள் கொஞ்சமாக அசைவதையும் விரும்பாமல், இன்னும் இறுக அவளை அணைத்துக் கொண்டே, “ம்ம்ம்...” என்று மட்டும் சொன்னான் விவேக்!
அவனின் அணைப்பும், அதன் பின்னே இருந்த காரணமும் புரிந்து பாரதியின் மனதில் இளம் தென்றல் வீசியது! ஆனாலும் கேட்க வந்ததை கேட்காமல் இருக்க அவளின் மனம் இடம் கொடுக்கவில்லை!
“என்ன விஷயம் ஆனந்த்? நாம அன்னைக்கு செய்த மெடிக்கல் செக்-அப் கூட சம்மந்தப் பட்ட ஏதாவதா?”
மெல்லிய சற்றே நடுங்கும் குரலில் பாரதி கேட்கவும், ஒரு வினாடி திகைத்து, அவளை தன் அணைப்பில் இருந்து விலக்கி நிறுத்தி அவளின் முகத்தை நேராக பார்த்தான் விவேக். பாரதியின் முகத்தில் தெரிந்த கலக்கத்தை கவனித்து, மீண்டும் அவளை தன் மார்புடன் சேர்த்து இறுக அணைத்துக் கொண்டான்!
“ஏன் ரதி இதை கேட்குற?”
“தெரியலைங்க... என்னவோ காலையில் இருந்து மனசுல இப்படி இருக்குமோன்னு தோணிட்டே இருக்கு... இதை தவிர மீதி எல்லா விஷயத்தையும் நான் முடிஞ்ச அளவு