மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 10 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
சக்தி வேண்டுமென்றே சாந்ததுரையை ஏற இறங்கப் பார்த்தாள்.
"நைட் ட்யூட்டி பார்க்குறது கஷ்டம் தான் SD. தூங்காம இருந்தா இப்படி தான் மண்டை பிராண்டும். போய் உங்க பாட்டி ரெடி செய்து வச்சிருக்க அறுசுவை உணவை நல்லா வெட்டு வெட்டிட்டு, படுத்து தூங்குங்க. எல்லாம் சரியா போகும்!"
"சக்தி, இந்த மாதிரியே பேசி எல்லா நேரமும் எஸ்கேப் ஆக முடியாது. என் மனசுல என்ன இருக்குன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்."
"டாக்டர் சார், உங்களுக்கு ஜோடியா ஒரு லேடி டாக்டரையோ, நர்சையோ கல்யாணம் செய்துக்கோங்க. சரியா இருக்கும். தேவை இல்லாத விஷயங்களை மனசில வச்சுக்குறது நல்லது கிடையாது!"
"ஏன் சக்தி இப்படி பேசுறீங்க? நானும் உங்களைப் போல தான். கல்யாணம் செய்துக்கனும்னு யோசிச்சதே கிடையாது. அன்னைக்கு ஜன்னல் ஏறி குதிச்சு நான் வந்தப்போ அடிச்சு தாக்குனீங்க பாருங்க, அப்போவே உங்க மேல ஒரு தனி இது வந்திருச்சு. நீங்க போலீஸ் ஆஃபிசர் சக்தின்னு தெரிஞ்ச உடனே அது பயங்கரமா மல்டிப்ளை ஆயிடுச்சு!" சாந்ததுரை அவர்களுடைய முதல் 'அடிதடி' சந்திப்பை நினைவு வைத்து சொன்னான்.
அவன் பிறந்து வளர்ந்த அந்த வீட்டிற்கு பர்வதம் பாட்டிக்கு தெரியாமல் அவ்வப்போது ரகசியமாக ஜன்னல் வழியாக நுழைந்து விசிட் கொடுப்பது அவனின் வாடிக்கை. பர்வதம் பாட்டி சக்திக்கு வீட்டை வாடகை விட்டிருப்பது தெரியாமல் சாந்ததுரை ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைய, சக்தி திருடன் என நினைத்து அவனை அடித்து துவைத்து எடுத்து விட்டாள்! பின்னர் இன்ஸ்பெக்டர் தென்றல்வாணனிடம் பேசி சமாளித்து வைத்தான் சாந்ததுரை!
அவன் சொன்ன அந்த நிகழ்வின் நினைவில் உதட்டோரம் மெல்லிய புன்னகை எட்டிப் பார்த்தாலும், அதை மறைக்க உதட்டை சுழித்தாள் சக்தி!
"இந்த மாதிரி பேச்சுல எல்லாம் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை SD. நீங்க தேவையே இல்லாம