ப்ரியம்வதா இப்போதும் குழப்பத்துடன் அவர்கள் இருவரையும் பார்த்தாள்.
"நீங்க குழம்ப வேண்டாம் ப்ரியம்வதா. சக்தி ஒரு எக்ஸ் ஐபிஎஸ் ஆஃபிசர். சக்தி தமிழ்நாடு போலீஸ்ன்னு கூகிள்ல தேடிப் பாருங்க. அசந்துப் போயிடுவீங்க."
சத்யா சொல்ல, ப்ரியம்வதா சக்தியை அவள் சொல்வது உண்மையா என்ற கேள்வியுடன் பார்த்தாள். சக்தி சத்யாவே பேசட்டும் என்று அமைதியாக இருந்தாள்!
"இந்தாங்க மொபைல்ல தேடிப் பாருங்க. நான் சொல்றது உண்மைன்னு உங்களுக்கே தெரியும்." சத்யா அவளுடைய மொபைலை ப்ரியம்வதாவிடம் நீட்டினாள்.
"என் கிட்டேயே ஃபோன் இருக்கு." ப்ரியம்வதா கைப்பையை திறந்து தன் ஃபோனை வெளியே எடுத்துப் பார்க்க தொடங்கினாள்.
சத்யா ஆர்வத்துடன் ப்ரியம்வதாவையே கவனித்துக் கொண்டிருந்தாள். சக்தி மேஜை மீதிருந்த பேப்பர் வெயிட்டை உருட்டிக் கொண்டிருந்தாள்.
இரண்டு நிமிடம் போயிருக்கும். அதிசயம் நிறைந்த கண்களுடன் நிமிர்ந்துப் பார்த்தாள் ப்ரியம்வதா.
"நீங்க சென்னையில இருந்த டிஐஜி சக்தியா?" என்றாள் ப்ரியம்வதா ஆச்சர்யத்துடன்!
சக்தி முகத்தில் எந்த மாற்றமும் இல்லாது ஆம் எனும் அர்த்தத்தில் தலையை ஆட்டினாள்!
🌼🌸❀✿🌷
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
தொடரும்