எதிர்பார்த்திருக்கவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.
"என்ன இவங்களா இன்வெஸ்ட்டிகேட்டர்ஸான்னு யோசிக்காம உங்க பிரச்சனையை சொல்லுங்க. நாங்க ஹெல்ப் செய்றோம்!" சத்யா ப்ரியம்வதாவின் திகைப்புக்கான காரணத்தை புரிந்துக் கொண்டவளாக பேசினாள்.
ஆனாலும் ப்ரியம்வதாவின் முகம் தெளிவாகவில்லை.
"இல்லை. இது சரியா இருக்காது. நான் வேற... தப்பா எடுத்துக்காதீங்க. இது ரொம்ப ஆபத்தான விஷயம். உங்களுக்கு வேண்டாம்..." ப்ரியம்வதா குழப்பத்துடன் பேசினாள்.
"ஹலோ!" சுள்ளென்று எதுவோ பதில் சொல்ல தொடங்கிய சக்தியை பேச விடாமல் சத்யா குறுக்கே பேசினாள்.
"உங்க குழப்பம் புரியுதுங்க ப்ரியம்வதா. ப்ரைவேட் இன்வெஸ்ட்டிகேட்டர்னா பொண்ணா இருப்பாங்கன்னு நினைச்சு இருக்க மாட்டீங்க. அது புரிஞ்சுக்க முடியுது. முதல்ல உட்காருங்க." சத்யா ப்ரியம்வதாவிற்கு ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொடுத்தாள்.
"இல்லை... பரவாயில்லை," என்றாள் ப்ரியம்வதா தயக்கத்துடன்!
"உட்காருங்க ப்ரியம்வதா." சத்யா ஃப்ளாஸ்க்கில் சூடாக இருந்த டீயை ஒரு கோப்பையில் ஊற்றி ப்ரியம்வதாவிற்கு கொடுத்தாள்.
"இதைக் குடிங்க. கொஞ்சம் தெம்பா இருக்கும்!"
வேண்டாம் என்று சொல்ல நினைத்த ப்ரியம்வதா அந்த தேநீரின் வாசனையில் கவரப் பெற்று சத்யா நீட்டிய கோப்பையை கையில் வாங்கிக் கொண்டாள்.
ப்ரியம்வதா டீ பருக தொடங்கும் வரை அமைதியாக இருந்தாள் சத்யா.
அதற்கு பின், "என்னங்க உங்க பிரச்சனை? சொல்லுங்க," என்றாள்!