மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 11 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
"தேங்க் காட் சக்தி மேடம்! உங்களை மாதிரி ஒருத்தங்க இங்கே எனக்கு உதவ இருக்கிறது என் அதிர்ஷ்டம்."
ப்ரியம்வதா விழிகளை விரித்து சொன்னதற்கு சக்தி முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், சத்யா முகம் பிரகாசம் ஆனது!
"இதை உங்க ப்ராப்ளமை நாங்க சால்வ் செய்த பிறகு சொல்லுங்க ப்ரியம்வதா! முதல்ல உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க!" சத்யா திரும்பவும் கேட்டாள்.
ப்ரியம்வதாவின் முகம் வாடியது.
"பிரச்சனை எனக்கு இல்லை மேடம். என்... எனக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கு..." ப்ரியம்வதா அத்துடன் நிறுத்தி விட்டு தயக்கத்துடன் சத்யா, சக்தியின் முகத்தைப் பார்த்தாள்.
"உங்களுக்கு தெரிஞ்சவருக்கு என்ன பிரச்சனை? சொல்லுங்க ப்ரியம்வதா!" சத்யாவின் கனிவான குரல் ப்ரியம்வதாவிற்கு தெம்பை கொடுத்தது.
"நான் சொன்னவர் பேர் வினாயக். ரொம்ப ப்ரில்லியன்ட் பெர்சன். நானும் அவரும் ஒரே கம்பெனில, சூப்பர் குட் எலக்ட்ரானிக்ஸ் கார்பொரேஷன்ல வேலை செய்தோம். வேற வேற டிபார்ட்மென்ட். நான் ப்ரொடக்ஷன். அவர் இனோவேஷன்!"
வினாயக் என்ற பெயர் கேட்ட உடன் பேப்பர் வெயிட்டை விட்டு விட்டு கூர்மையுடன் ப்ரியம்வதா சொல்வதை கவனிக்க தொடங்கினாள் சக்தி.
ப்ரியம்வதா பொறுமையாக நடந்ததை விவரித்தாள். வினாயக் சந்திரமௌலியை எதிர்த்து பேசி வேலையை இழந்தது, கோர்ட்டில் நடந்த கேஸ், வினாயக் மதியூரில் இருக்கும் அவர்களின் பரந்து விரிந்த எஸ்டேட்டிற்கு வந்தது, திடீரென காணாமல் போனது, இன்ஸ்பெக்டர் அவனிடம் பேசியது என அனைத்தையும் அவர்களிடம் சொன்னாள்.
"இன்ஸ்பெக்டர்னா, மதியூர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரா?" சத்யா பதற்றத்துடன் விசாரித்தாள்!