தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
56. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அவள் விரும்பியதுப் போல ராஜீவாக எதுவும் சொல்லாமல் இருக்கவும், மீண்டும் தயக்கத்துடன் பேசினாள் கீதா!
"நீங்க வரும் போது அதை பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன் ராஜ்... வந்து... நான் சொல்றது உங்களுக்குப் பிடிக்காததா இருக்கலாம்..."
வழக்கத்திற்கு மாறாக, கீதா நேரடியாக பேசாது, இப்படி தயக்கத்துடன் சுற்றி வளைப்பதற்கான காரணம் புரியாமல் மீண்டும் அவளை கேள்வியாய் பார்த்தான் ராஜீவ்!
அவனின் கேள்வி புரிந்தவளாக விளக்கம் கொடுக்க முனைந்தாள் கீதா.
"இப்படி யோசிச்சு பாருங்க, இந்துக்கு சஞ்சீவை பிடிச்சிருக்கு. அதுல எனக்கு சின்ன சந்தேகமும் இல்லை... சஞ்சீவும் அதே போல் தான். அவருக்கு இந்துவை பிடிச்சிருக்க விஷயம் நூறு இல்லை இருநூறு சதவிகிதம் நிஜம்.... ஆனால் சஞ்சீவ் கிட்ட இந்து இப்படி வேண்டாம்னு சொல்லனும்னா, அதுக்கு வேற யாரோ தான் காரணமா இருக்க முடியும்... அது யாரு?? அர்ச்சனா ஆன்ட்டியை எடுத்துகிட்டா, அவங்களுக்கு இந்து சீக்கிரமா கல்யாணம் செஞ்சுக்கனும்னு ரொம்ப ஆசை. அவங்க சஞ்சீவ வேண்டாம்னு சொல்லவும் காரணம் இல்லை... உண்மையில அவங்க ரொம்ப சந்தோஷப் படனும்..."
"கரெக்ட்..." என்றான் ராஜீவ்!
"அப்புறம், சேகர்... அவர் இதுல வர சான்ஸ் கம்மி... நந்தினி ஏதாவது செய்ய வாய்ப்பு இருக்கு... ஆனால் நந்தினிக்காக இந்து சஞ்சீவை வேண்டாம்ன்னு சொல்வான்னு என்னால நம்ப முடியலை... நந்தினி அப்படி ஏதாவது சொன்னா கூட, இந்து இன்னும் அடம் பிடிக்க தான் செய்வா... அதுவும் இல்லாம அதைப் பத்தி என் கிட்ட இந்து சொல்லாமல் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை..."
"ஸோ?????"
"வேற யாரு இதில் இன்வால்வ் ஆக முடியும்? நம்ம வீட்டுலன்னு பார்த்தா, கண்மணி... அவ