அமர்ந்திருந்தான்...
இவனிடம் முறைப்பு எல்லாம் வேலைக்கு ஆகாது என்பது புரிய,
“இதெல்லாம் ரொம்ப ஓவர்!!! என் கதையை சொல்ல சொன்னா, நீங்க உங்க ஃப்ளாஷ்பேக் சொல்றீங்க!” என்றாள் கிருத்திகா கடுப்புடன்.
“இங்கே பாரு பிரின்சஸ், நம்ம இரண்டு பேர் கதையும் ஒரு வட்டம் போல... இது தான் ஆரம்பம், இது தான் முடிவுன்னு சொல்ல முடியாது... என் கதையில உன் கதை இருக்கு, உன் கதையில என் கதை இருக்கு...”
“அய்யோ, எனக்கு தலையை பிச்சுக்கலாம் போல இருக்கு...”
“ஹேய் ஹேய் பொறுமை பொறுமை... இங்கே பார் நான் சொன்னது போல தியாகு வீட்டுல நான் கீதாவை மீட் செய்தேன்... தியாகு உன்னை எங்க கல்யாணத்துல மீட் செய்தான், அதை தான் சொன்னேன்...”
விஜயை ஒரு பார்வை பார்த்து விட்டு,
“நீங்க அண்ணியை பார்த்தவுடனே குப்புற விழுந்துட்டீங்கன்னு தெரியுது, அண்ணி எப்படி???” எனக் கேட்டாள்.
“அவளா...!!!! நான் ஒருத்தன் அங்கே இருக்கிறது கூட அவளுக்கு தெரிஞ்ச மாதிரி தெரியலை... ஒவ்வொரு மாசமும் செகன்ட் சாட்டர்டே அவளுக்கு ஜும்பா டான்ஸ் கிளாஸ் இருந்தது... அது தியாகு வீடு பக்கம்... ஸோ, அவ அங்கே வருவா... நானும் கரக்ட்டா செகன்ட் சாடர்டே அங்கே ஆஜர் ஆகிடுவேன்... பக்கத்துல இருக்க ஹோட்டல்ல பிரியாணி நல்லா இருக்கும்னு ஒரு சாக்கு வேற வச்சிருந்தேன்... நானும் தியாகுவும் அங்கே போய் ஒரு பிடி பிடிப்போம்...”
“தங்கச்சியை சைட் அடிச்சுட்டு அண்ணன் கூட பிரியாணி சாப்பிட்டீங்களா, ரொம்ப நல்லவர் தான்...!”