(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்...  - 78 - பிந்து வினோத்

78. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

பாரதியாக பேசட்டும் என காத்திருந்த விவேக், அவள் தொடர்ந்து அவனையே பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்கவும், “என்ன ஆச்சு ரதி? இன்னும் உன் மனசில என்ன இருக்கு? சொல்லுடா... என் மேல கோபம் இருந்தா திட்டி தீர்த்துடு,” என்றான் மென்மையாக!

  

மறுப்பாக தலை அசைத்த பாரதி, “கோபம் இல்லை ஆனந்த்... ஆனால், நிஜமாவே நீங்க என் மேல கோபப் படுறது மாதிரி நடந்துக்கிட்டா நான் உங்களை வெறுத்துடுவேன்னு நினைச்சீங்களா? என்னுடைய அன்பு மேல உங்களுக்கு இத்தனை நம்பிக்கையா?” என்றாள் வருத்தத்துடன்.

  

ப்ளீஸ் ரதி, இந்த மாதிரி டோன்ல சோகமா என் கிட்ட பேசாதே... உன்னை என்னால முடிஞ்ச அளவுக்கு வருத்தப்படாம பார்த்துக்கனும்னு நினைச்சேன்...”

  

ஓ!”

  

ப்ளீஸ்டா... தப்பு தான்... இந்த இரண்டு மாசமும் உனக்கு மட்டும் இல்லை எனக்கும் கூட சித்ரவதையா தான் இருந்தது... அதுல இருந்து தப்பிக்கவே பேசாமல் சர்ஜரி செய்துக்கலாமான்னு கூட நினைச்சேன்...”

  

என்னங்க நீங்க... ஆனால் ஒரு விதத்துல பார்த்தா, இந்த இரண்டு மாசமும் கூட நல்லதுக்கு தான்...”

  

நல்லதா? என்ன சொல்ற நீ? உன்னை நேரா பார்க்க முடியாம, எதுவும் பேச முடியாம, பக்கத்துல வந்து உட்கார கூட முடியாம, எவ்வளவு கொடுமையான பீரியட் அது...”

  

ஒரு விதத்தில் அப்படி தான்... ஆனால் என் மனதை ரொம்ப தெளிவாக்கின நாட்கள் ஆனந்த்... உங்க மேல் எனக்கிருந்த அன்பு எனக்கு தெரியும். ஆனால் அது எத்தனை வலிமையானதுன்னு இப்போ தான் நானே புரிஞ்சுக்கிட்டேன்...”

  

எப்படி?” சந்தேகத்துடன் ஒலித்த கணவனின் கேள்வியை கேட்டு பெரிதாக புன்னகைத்த பாரதி,

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.