”இங்கதான் வெளிய அலைஞ்சிக்கிட்டு இருக்கும், இப்ப நாம வெளிய போனோம்னா உன்னை பேய்கள் பிடிச்சிக்கும் அமைதியா இங்கயே இருக்கறதுதான் நமக்கு நல்லது”
”அகத்தியா இப்படி பயந்துக்கிட்டே இருக்கறதுக்கு ஏதாவது செய்யேன்“
”என்னடி செய்யச் சொல்ற மனுஷங்களா இருந்தா கராத்தே குங்பூன்னு சண்டை போட்டு உன்னை காப்பாத்தலாம், பேய்கள்கூட நான் எப்படி சண்டை போடறது, அப்புறம் அதுங்க என்னை கொன்னுட்டா” என அவன் சொல்லி முடிக்கவும் நாச்சியா அவனது வாயை தன் உள்ளங்கையால் மூடவும் சரியாக இருந்தது
”எந்த நேரத்தில என்னத்த பேசனும்னு விவஸ்தையில்லையா உனக்கு லூசு”
”என்ன செய்றதுன்னு தெரியலை நாச்சியா வெளிய போக பயமாயிருக்கு”
”அகத்தியா அந்த பேய்களுக்கு தேவை நானும் அந்த உயிலும்தான், உன்னை அதுங்க எதுவும் செய்யாது”
”அப்படியா சொல்ற”
”ஆமாம் வேணும்னா நீ வெளிய போய் பாரு அவங்க உன்னை எதுவும் செய்ய மாட்டாங்க”
”அடிப்பாவி கட்டின புருஷனை இப்படி பேய்கிட்ட அனுப்பறியே, நீ சோதிச்சி பார்க்க நான்தான் கிடைச்சேனா போ முடியாது நான் போக மாட்டேன்“
”ப்ளீஸ் அகத்தியா உன்னால மட்டும்தான் என்னை காப்பாத்த முடியும், ஏதாவது வழியை பாரு போ” என விரட்ட அவனோ பயந்தபடியே அங்கிருந்து வெளியேறினான்.
அங்கு கமிஷனரோ சிரித்த முகத்துடன்