மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 17 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
திருவிழா கூட்டம் அலை மோதிக் கொண்டு இருந்தாலும், ராகுலை சக்தி மற்றும் சத்யாவால் சுலபமாக அடையாளம் காண முடிந்தது.
“குடும்பமே இங்கே தான் இருக்காங்க!” சக்தி தொலைவில் இருந்த கலைவாணி, ப்ரியம்வதாவை சுட்டிக் காட்டினாள். அவர்கள் பக்கத்தில் ராகுல் மட்டுமில்லாமல் ஜீன்ஸ் அணிந்த இன்னுமொரு அழகிய இளைஞன் ஒருவனும் இருந்தான்.
“ப்ரியம்வதா பக்கத்துல இருக்குறது அவ அண்ணன் ராகுல். இரண்டுப் பேரும் ஒரே ஜாடையில இருக்காங்க. அவங்க பக்கத்துல இருக்குறவன் ஸ்ரீனிவாஸ்ன்னு நினைக்கிறேன்,” என்றாள் சக்தி.
“அட, இவன் தான் ஸ்ரீனிவாசா? என்ன ஸ்மார்ட்டா இருக்கான்,” என்றாள் சத்யா!
ப்ரியம்வதா பக்கம் போக நடக்க தொடங்கி இருந்த சக்தி, நின்று சத்யாவை பார்த்தாள்.
“வர வர நீ சரியே இல்ல சத்யா. இப்படி எல்லாம் பேசிட்டே இருந்தா, கட்டாயம் தேன் ஒருநாள் என்னை போலீஸ் லேங்குவேஜ்ல திட்டப் போறார்”
“சும்மா பயப்படாம வா சக்தி. அவனை ஸ்மார்ட்ன்னு சொன்னா தப்பா?”
“எனக்கு தப்பில்லை. தேன் அதையே சொல்வாருன்னு நினைக்குற?”
“நீ எதுக்கு, எதுக்கு எடுத்தாலும் அவர் பேரை இழுத்துட்டு இருக்க?”
“அவங்க பக்கத்துல வந்துட்டோம். அமைதியா இரு!”
சக்தி, சத்யா இருவரும் ப்ரியம்வதா, கலைவாணி முன் சென்று நின்றார்கள். ப்ரியம்வதாவின் முகம் சரியாக இல்லை. அவர்களை அவள் முதலில் கவனிக்கவே இல்லை.
“சத்யா, என்ன நீ மட்டும் இருக்க? இன்ஸ்பெக்டர் எங்கே?” கலைவாணி சத்யாவிடம் விசாரித்தாள்.