மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 18 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
துப்பாக்கி அவள் பக்கம் இருந்தாலும், துல்லியமாக அவள் மேலே குண்டு பாயும் கோணத்தில் அந்த துப்பாக்கி இல்லை என்பதை சக்தியின் போலீஸ் மூளை ஒரு சில வினாடிகளிலேயே கண்டுக்கொண்டது!
ஆகையினால், துப்பாக்கியை விட, துப்பாக்கி இருந்த இடம் அல்லது துப்பாக்கியை வைத்திருந்த அது மீது தான் சக்தியின் மொத்த கவனமும் இருந்தது.
ஆங்கில திரைப்படங்களில் வரும் ஏலியன்ஸ் (வேற்று கிரக வாசிகள்) தான் அவளுக்கு முதலில் நினைவுக்கு வந்தது. ஆனால் இது ஏலியன் எல்லாம் இல்லை என்பதை அவளின் அறிவு அறிவுருத்தியது.
அது மொத்தத்தில் இரண்டடி கூட இருக்காது, ஒன்று, ஒன்றரை அடி உயரம் இருக்கும்!
கண்கள் இருந்தது. இமைகள் இல்லை. காதுகளும் இல்லை. மூக்கு இருக்கும் இடத்தில சிகப்பு நிறத்தில் சிறிய ஒளி மின்னி மறைந்துக் கொண்டிருந்தது. உலோகத்தில் ஆன உடல் அந்த குறைவான வெளிச்சத்திலும் மின்னியது. கைகள் இருக்க வேண்டிய இடத்தில் தான் ஒரு துப்பாக்கி பொறுத்தப் பட்டிருந்தது. சிறிய குழந்தையின் கால்கள் போல அதற்கு மிகவும் சிறிய, மெல்லிய உலோக கால்கள் இருந்தது.
இப்போது அதன் கண்கள் சக்தி ஓடி வந்த திசையில் நிலைத்து இருந்தது.
சக்தி அப்போது இருந்த அபாயமான நிலையிலும் அவளுக்கு சத்யாவின் நினைவு வந்தது. சத்யா இதைப் பார்த்திருந்தால் பயந்துப் போயிருப்பாள். அந்த எண்ணம் தோன்றியதோ இல்லையோ, எங்கே சத்யா தன்னை பின்தொடர்ந்து வந்திருப்பாளோ என்ற கேள்வி சக்திக்கு உண்டானது.
காதை கூர்மையாக்கிக் கொண்டு திரும்பிப் பார்த்தாள். தூரத்தில் குழப்பமான, என்ன என்று புரிந்துக் கொள்ள முடியாத சத்தம் எதுவோ கேட்டது. ஆனால் காலடி சத்தம் எதுவும் கேட்கவில்லை. சத்யாவோ வேறு யாரோ இந்த பக்கம் வரவில்லை என்பது உறுதியான உடன், கீழே விழுந்திருந்த மனிதனை மீண்டும் கவனித்தாள் சக்தி. அவனிடம் அசைவு எதுவும்