அதற்கு மேல் தியாகு வேறு கேள்விகள் கேட்டுக் கொண்டு நிற்கவில்லை! அவனின் எதிர்கால வாழ்க்கைக்கு வேகமாக திட்டமிட தொடங்கினான்!
கிருத்திகாவிற்கு என ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து வாங்கினான், பார்த்து பார்த்து அனைத்தையும் செய்தான்!
அவளின் மனதை முழுவதுமாக வென்றே தீருவது என்ற தீர்மானத்துடன் மும்முரமாக செயலில் இறங்கினான்.
🌼🌸❀✿🌷
மணமேடையில் தியாகுவின் அருகே வந்து அமர்ந்தாள் கிருத்திகா! தியாகு அவளைப் பார்த்து காதலுடன் புன்னகைத்தான்!
பதிலுக்கு அவளிடம் வெட்கம்... ஹுஹும்... ஒரு சின்ன புன்னகை... ஹுஹும்... எதுவுமே இல்லை! ‘உம்’ என்று முகத்தை வைத்திருந்தாள்!
தியாகுவுக்கு அது என்னவோ அவளின் அந்தக் கோலத்தையும் கூட ரசிக்க தான் தோன்றியது! அவளை சீண்டும் எண்ணத்துடன், வேண்டுமென்றே அவளின் அருகே உரசிக் கொண்டு அமர்ந்தான்.
அவன் பக்கம் திரும்பி, அவனை பார்த்து ஒரு முறை முறைத்த கிருத்திகா,
“ஹேய் ஜெம் ஒழுங்கு மரியாதையா தள்ளி உட்காரு,” என்றாள்.
தியாகு வேண்டுமென்றே புரியாததுப் போல இன்னும் கொஞ்சம் அவளை உரசியவாறு அமர்ந்தான்.
அவள் இன்னும் அதிகமாக முறைக்க,