தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 46 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
விக்கிராந்த் மெசேஜ் அனுப்ப மறந்து வேலையில் ஆழ்ந்திருந்த நேரம், வீட்டில் இருந்த ப்ரியாவின் மனம் பரபரத்துக் கொண்டிருந்தது!
அவள் பார்க்கில் இருந்து வீடு வர பயன்படுத்திய ஆட்டோவின் டிரைவர் வேறு சென்னையில் அதிகமாகி வரும் போக்குவரத்து நெரிசல் பற்றியும், அன்று அவர் பார்க்க நேர்ந்த ஒரு பைக் விபத்து பற்றியும் அவளிடம் பேசிக் கொண்டே வந்தார்.
தன் மனதில் இருந்ததை யாரிடமாவது கொட்டும் ஆதங்கம் அவருக்கு!
அதைக் கேட்டு வீடு வந்திருந்த ப்ரியாவிற்கு விக்கிராந்த் வீட்டிற்கு சென்ற பின் அனுப்புகிறேன் என்று சொன்ன மெசேஜ் வராததற்கான காரணம் புரியவில்லை!
அவன் அவளின் ஆட்டோவை தொடர்ந்து வந்ததும், அவள் வீட்டினுகுள் நுழைந்தப் பிறகு சென்றதும் அவளுக்கு தெரியும்...
இந்நேரம் அவன் வீட்டிற்கு சென்று சேர்ந்திருக்க வேண்டுமே... பிறகு ஏன் மெசேஜ் வரவில்லை???
அவளின் மனம் எதை எதையோ நினைத்து குழம்பியது!
ஆனாலும் (!!!) அவனை அழைத்துப் பேச மனம் வரவில்லை! மனதில் கரைப் புரண்ட கலக்கமும் பரபரப்புமாகவே இருந்தாள்!
🌼🌸❀✿🌷
ஒன்பது மணி அளவில் பசி வயிற்றை கிள்ளியதால் சோஃபாவை விட்டு எழுந்த விக்கிராந்த், ராஜம் கொடுத்திருந்த பொடிகளை வைத்து அவனுக்கான இரவு உணவு தயாரித்தான்!
ப்ரியா வந்த பிறகு இந்த வேலையுமில்லை என்று நினைத்தவனுக்கு அப்போது தான் அவளுக்கு மெசேஜ் அனுப்பாதது நினைவில் வந்தது!