(Reading time: 28 - 55 minutes)
Pennennum ponnazhage
Pennennum ponnazhage

தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே  - 01 - சசிரேகா

  

முன்னுரை

   

முதல் பாதி நாயகியை விரும்பி அவளின் மனதில் இடம்பிடிக்க போராடும் நாயகனும் பிற்பாதியில் விலகிச் செல்லும் நாயகனை விரும்பி அவனின் மனதில் இடம்பிடிக்க போராடும் நாயகியும் அவர்களுக்கு எதிராக நிற்கும் இருவரின் குடும்பங்களும் அதையும் கடந்து அவர்கள் இணைந்தது எப்படி என சொல்வதே இக்கதையாகும்.

   

பாகம் 1

   

காஞ்சிபுர நகரத்தின் அவுட்டரில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதி

   

விடிகாலை மணி 4.45

   

படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த பூங்கொடியை யாரோ உலுக்கியது போன்ற உணர்வு அவள் மெல்ல கண்கள் திறந்துப் பார்த்தாள். சுற்றிலும் இருள் இருந்தாலும் ஜன்னல் வழியாக சிறிது வெளிச்சம் வந்தது, அந்த வெளிச்சத்திற்கு தன் கண்களை பழக்கிக் கொள்ள அவள் சில நொடிகள் எடுத்துக் கொண்டாள். 

   

அவளுக்கென தனியறை, சிங்கிள் பெட், கழுத்து வரை போர்த்தியிருந்த போர்வையில் இருந்து தனது இடது கையை மட்டும் வெளியே எடுத்து வழக்கமாக தலையணை பக்கத்தில் வைத்திருக்கும் சிறிய அளவிலான அலார கடிகாரத்தை எடுத்துப் பார்த்தாள். மணி 4.45 என இருக்கவே அவள் மனம் மகிழ்ந்தாள்.

   

”பரவாயில்லை 5 மணிக்கு அலாரம் வைச்சோம் ஆனா நாலே முக்காலுக்கே விழிப்பு வந்துடுச்சி, இன்னும் கால் மணி நேரம் படுத்து தூங்கலாம் அலாரம் அடிச்சாலே எழலாம்” என நினைத்து அலாரத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு கையை போர்வைக்குள் இழுத்துக் கொண்டு கண்கள் மூடி உறங்கலானாள்.

   

5 நிமிடம் கழித்து மீண்டும் அவள் கண்கள் திறந்தாள் மறுபடியும் அவளது கையை தானாகவே அலாரத்தை எடுத்தது இன்னும் ஐந்து மணியாக 10 நிமிடம் உள்ளது என வரவும் மீண்டும் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.