(Reading time: 8 - 15 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 45 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

விக்கிராந்திற்கும் திருமணப் பேச்சில் சம்மதம் இருப்பதாக வைஜெயந்தி சொல்லி இருந்தாலும், ப்ரியா அதை பெரிதாக எடுத்துக் கொண்டிருக்கவில்லை! அவளுக்கு விக்கிராந்தின் மீது அபிமானம் இருந்தது ஆனால் விக்கிராந்திற்கு அது போன்ற ப்ரியம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எதுவும் அவளிடம் இல்லை. ஆனால் இப்போது விக்கிராந்த் பேசிய விதம் அவளுள் நொடிப் பொழுதில் கலர் கலர் கனவுகளை வர வைத்தது என்னவோ நிஜம். அதற்காக அது எல்லாமே உண்மை என்று நினைக்கவும் அவளுக்கு பயமாக இருந்தது.

   

“ப்ரியா???”

   

விக்கிராந்தின் அழைப்பு ப்ரியாவை யோசனையில் இருந்து வெளிவர செய்தது. மனதில் ஓடியவற்றை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்க அவள் முயற்சி செய்ய,

   

"கல்யாணம்ன்னு ஒன்னு ஏன் இருக்குன்னு நிறைய தடவை யோசிச்சிருக்கேன் ப்ரியா. இப்போ இருக்க லைஃப்ஸ்டைல்ல அதெல்லாம் தேவையான்னு கூட கேள்வி வரும். யோசிச்சு பார்த்தா கமிட்டட் ரிலேஷன்ஷிப்ல நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு ம்யூச்சுவல் லவ், அன்டர்ஸ்டான்டிங், ட்ரஸ்ட்... எனக்கு நீ இருக்க, உனக்கு நான் இருக்கேன்னு ஒரு நல்ல ஃபீல் கொடுக்குற உறவு... மத்தப்படி ஒழுக்கமான வாழ்க்கை வாழ, குடும்பம் எனும் ஒரு நல்ல சூழல் இருக்க, இப்படி எவ்வளவோ...” என்றான் விக்கிராந்த்.

   

"ம்ம்ம்..."

   

"தேவையில்லாத பழைய விஷயங்களை பிடிச்சு வச்சுட்டு இந்த நிகழ் காலத்தையும் வர போகும் எதிர் காலத்தையும் இழக்குறது சரியா? Let go of the past and embrace the future! நம்ம கல்யாணம் நம்ம இரண்டுப் பேருக்குமே ஃப்ரெஷ் பிகினிங்கா இருக்கும்!"

   

"நான் தான் சொன்னேனே, இது எல்லாம்..."

   

ப்ரியா பேசி முடிக்க காத்திருக்காது, அவளின் வலது கரத்தை பற்றி தன் இரு கைகளுக்கு நடுவே வைத்த விக்கிராந்த், அவளின் கைக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து,

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.