(Reading time: 8 - 15 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

லுக்கோ, கேரக்டரிஸ்டிக்ஸோ இருக்க ஹீரோ இல்லை. சாதாரண மனுஷன்! உனக்கு ஏத்தவனான்னு நீ யோசிக்குறதுல தப்பில்லை," என்றான் விக்கிராந்த் அவனின் புன்னகை பெரிதாக!

   

அதுவரை சீரியஸாக பேசிக் கொண்டிருந்தவனின் இந்த திடீர் குறும்பு பேச்சு ப்ரியாவை திகைக்க வைத்தது! தானாக அவளின் கண்கள் அவன் இருந்த திசையில் சென்றது!

   

அங்கே அவள் பார்த்த விக்கிராந்தின் புன்னகை அவளை என்ன என்னவோ செய்தது!

   

புன்னகை கூடவே விக்கிராந்தின் விழிகளில் மின்னிய ஜொலிப்பும் கண்ணில் படவும், "உங்க கிட்ட பேசி பிரயோஜனமில்லை! வாங்க போகலாம்," என சொல்லி, அவன் பிடியில் இருந்த கையை வலுக் கட்டாயமாக விடுவித்துக் கொண்டு, அவனின் பதிலுக்கும் காத்திருக்காமல் எழுந்து நடந்தாள் அவள்.

   

"ஹேய் ப்ரியா! நான் சொன்ன வசனம் கேட்டு, நீ, அப்படி எல்லாம் இல்லைங்க விக்கி, நீங்க அழகோ அழகுன்னு சொல்லனும்! நீ என்ன ஒன்னுமே சொல்லாம எழுந்து எஸ்கேப் ஆகுற? விட்டா நான் சொன்னது தான் உண்மைன்னு சொல்வ போலருக்கே?"

   

சுலபமாக இரண்டே அடிகளில் அவளின் அருகே வந்திருந்த விக்கிராந்த் கேட்ட கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் இன்னும் வேகமாக நடந்தாள் ப்ரியா.

   

பார்க்கில் இருந்து வெளியே வந்து சாலையை அடைந்தப் பிறகே நின்றவள், விக்கிராந்திடம்,

   

"நான் இங்கே இருந்து ஆட்டோ பிடிச்சு கிளம்புறேன்! நீங்களும் கிளம்புங்க... பை," என்றாள்.

   

பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், "நான் உன்னை ட்ராப் செய்றேன் ப்ரியா. வா பைக்ல போகலாம்," என்றான் விக்கிராந்த்.

   

"வேண்டாம்!"

   

"என்னால தான் உனக்கு லேட் ஆச்சு, நானே ட்ராப் செய்றேன்."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.