ப்ரியா பேசிக் கொண்டிருக்கும் போதே, அவளின் செல்ஃபோன் மெல்ல ஓசை எழுப்பியது.
ஆவலுடன் எடுத்துப் பார்த்தாள்.
விக்கிராந்த் தான் இப்போதும் மெசேஜ் அனுப்பி இருந்தான்.
"குட் மார்னிங் ப்ரியா! ஹாவ் அ கிரேட் டே!"
அவனும் இப்போது தான் தூங்கி எழுந்தான் போலும்!
தானாக முகமும் மனமும் மலர, வேலைக்கு செல்ல தயாராக தொடங்கினாள்.
🌼🌸❀✿🌷
வீட்டில் இருந்து லேட்டாக கிளம்பியதோ, கூட்டம் நிரம்பி வழிந்த பஸ்ஸோ ப்ரியாவின் மனநிலையை மாற்றவே இல்லை. விக்கிராந்தின் மெசேஜை படித்ததும் ஏற்பட்ட அதே மலர்ச்சியுடன் பள்ளியை அடைந்தவள், முன் தின மாலையின் நினைவில் இடது புறம் திரும்பி பார்த்தாள்!
என்ன ஆச்சர்யம், விக்கிராந்த் இப்போதும் அங்கே தான் நின்றிருந்தான்!!!!
காற்றில் அலை அலையாக கலைந்து ஆடிய அவனின் தலை கேசமும், மலர்ந்திருந்த கண்களும், உதட்டில் இருந்த மெல்லிய புன்முறுவலும் அவளை ஈர்த்தன!
அவளருகே வந்த விக்கிராந்த்,
"மெசேஜ் அனுப்பினேன், ரிப்ளை வரலை, அது தான் நேராவே விஷ் செய்ய வந்தேன்! இனி மேல் ஸ்கூல் வாசல்ல என் தரிசனம் வேண்டாம்னா உடனே மெசெஜூக்கு ரிப்ளை செஞ்சுடு! சரி வந்த வேலையை பார்க்கிறேன், குட் மார்னிங் ப்ரியா, ஹாவ் அ நைஸ் டே," என்றான்.