கிளம்ப மனமே இல்லாமல்தான் கிளம்பினாள் அர்ச்சனா. இரண்டு, மூன்று நாள் அப்பாவுடன் இருந்து அவரை பார்த்துக்கொள்வதாக விவேக் கொடுத்த வாக்குறுதி அவளுக்கு தைரியத்தை கொடுத்திருந்தது.
அவனுக்கு பலமுறை நன்றி சொல்லிவிட்டு தான் கிளம்பினாள் அர்ச்சனா.
மனோவின் கார் அங்கிருந்து நகர்ந்த பின்தான் அப்பாவை லேசான பயம் பற்றிக்கொள்ள துவங்கியது.
'என் மகள் என்னை விட்டு போய் விடுவாளா? அங்கே மேஜை மேலே இருந்த அவள் புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்தார் அப்பா.
டெல்லியில் அந்த வீட்டு மேஜையின் மேலே இருந்த புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருந்தான் வசந்த்.
அதை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் அனுராதா.
அவள் எதிரில் இருந்த தட்டில் உப்புமா ஆறிகொண்டிருந்தது.
'யாருக்குமே உப்புமா பிடிக்காது. அதை எப்படித்தான் இப்படி விரும்பி சாப்பிடறியோ தெரியலை' அனு வசந்திடம் கேட்டிருக்கிறாள்.
'அவங்க எல்லாம் ரசனை இல்லாதவங்க. இஞ்சி, பச்சைமிளகாய் வாசனையோட,சாம்பாரோட சேர்ந்து, சுடச்சுட, அது அப்படியே தொண்டைக்குள்ள இறங்கும் போது, ஆஹா..........சொர்க்கம்........'
'என்ன சாப்பிட்டானோ? அனுவின் மனம் அவனையே சுற்றியது.
தானே சமைத்து சாப்பிட்டுக்கொண்டு..........,தனியாய் வாழ்ந்துக்கொண்டு..........
அர்ச்சனாவுக்காக இப்படி தவம் இருக்கத்தான் வேண்டுமா? அவனுக்காக காத்திருக்கும் பெண்களா இல்லை?
சில நிமிடங்கள் அந்தப்புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்தவள், தன் கைப்பேசியை எடுத்து அவன் எண்ணை அழுத்தினாள்.
'அனு' என்று ஒளிர்ந்தது அவன் திரை. அவனுக்குள்ளே பொங்கியே போனது உற்சாகம்.
ஹேய்..........அனு...........'சொல்லுடா' என்றான் வசந்த் 'எப்படிடா இருக்கே?
'எனக்கென்ன? என்றாள் அனு 'மகாராணி மாதிரி இருக்கேன். ஆமாம் அர்ச்சனா வந்து வேலைலே சேர்ந்தாச்சா? என்ன சொல்றாங்க மேடம்?
'ஏன்? இங்கே நடக்கிறது எதுவுமே உனக்கு தெரியாதாக்கும்? என்றான் வசந்த். 'ரெண்டு நாளைக்கு முன்னாடியே என்னாச்சு? ஏதாச்சுன்னு? எல்லா informationனையும் கேதர் பண்ணியிருப்பியே. எங்கே, இல்லைன்னு சொல்லு பார்ப்போம்'
'ம். ஆமாம்' என்றாள் அடிக்குரலில்
'அதானே' என்றான் வசந்த் 'இதைத்தவிர வேற என்ன வேலை உனக்கு?'
'சரி நீ எப்படி இருக்கே.' என்றாள் அனு
'எனக்கென்ன? சந்தோஷமா இருக்கேன்' என்றான் வசந்த்
'பொய்'
'நிஜம்மா..............' என்றான் வசந்த் அதுவும் உன் போன் வந்ததுக்கப்புறம் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.
'உன்னை பார்க்கணும் போலே இருக்கு டெல்லி வரியா?' என்றாள் அனு
கண்டிப்பா வருவேன் அனு' என்றான் வசந்த். 'எனக்குக்கூட ரெண்டு, மூணு நாளா உன் ஞாபாகம்தான். உன்னை பார்த்தால் மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்னு தோணுது.' வரேன்
'இப்பவே கிளம்பி வரியா?'
'இல்லைடா' என்றான் இன்னும் ஒரு வாரம், பத்து நாளைக்குள்ளே கண்டிப்பா வருவேன்
'எப்போன்னு கரெக்டா சொல்லு'
'ம்ஹூம். திடீர்ன்னு ஒரு நாள் உன் முன்னாடி வந்து நிற்பேன். சர்ப்ரைஸா. ஓ.....கே....யா?
'சீக்கிரம் வா ' 'உனக்காக காத்திருப்பேன்' என்றாள் வசந்தின் தங்கை அனுராதா.
தொடரும்
Manathile oru paattu episode # 06
Manathile oru paattu episode # 08
{kunena_discuss:683}