கணபதி, வைஜெயந்தியின் கணவன் தண்டபாணிக்கு தூரத்து உறவு. தண்டபாணி இறந்து பல வருடங்கள் ஆன பின்பும் இரண்டு குடும்பங்களுக்கும் இடையே நட்பு நிலைத்திருந்தது. பிரியாவை சந்திக்க சென்னை செல்லும் போதெல்லாம் கணபதியின் வீட்டிற்கு வருவது வைஜெயந்தியின் வாடிக்கை. இதற்காகவே தன்னுடைய கிராமத்தில் இருந்து முன்பே கிளம்பி வந்து விடுவாள்... மனதில் இருக்கும் வருத்தங்கள், குறைகள் அனைத்தையும் ராஜமிடம் கொட்டி தீர்த்தால் அவளுக்கு மனம் கொஞ்சம் லேசாகும்...
“அடுத்த தடவை வரும் போது பிரியா போட்டோ ஓன்னு கொடுங்க அக்கா... நானும் தெரிந்தவர்களிடம் சொல்லி வைப்பேன்...”
“அடுத்த தடவை என்ன இப்போதே தரேன்... போன தடவை போன போது குணா மொபைலில் எடுத்த போட்டோவை பிரிண்ட் போட்டு அவளிடம் கொடுக்க வச்
...
This story is now available on Chillzee KiMo.
...
படி எல்லாம் இல்லைப்பா... கொஞ்ச நேரம் சும்மா ரிலாக்ஸாக போவது தான்...” என்றான்.
கணபதி பதில் சொல்லாமல் மகனையே பார்த்தப்படி இருந்தார். ஆனால் ராஜமினால் அமைதியாக இருக்க இயலவில்லை.
“நீயாடா இப்படி பேசுறது? உன்னை நல்லபடியா வளர்த்ததா தானே நான் இதுவரை நினைச்சுட்டு இருக்கேன்...”