அம்மா சொன்னார்களா? ஏதேனும் சதி வலையோ? சொல்லாமல் ரகசியமாக கிளம்பி இருக்க வேண்டுமோ?
மனதில் பல கேள்விகள் தோன்ற, அதை காட்டிக் கொள்ளாமல்,
“இல்லை பெரியம்மா, ஈசியா கண்டுபிடிச்சுட்டேன். ஊரு காத்து எப்படி இருக்கு! சும்மா ஜில்லுனு பறக்குற மாதிரி! எங்கே பாரு பச்சை பசுமையா! ரொம்ப அருமையா இருக்கு பெரியம்மா! பிரியா இங்கே வராம எப்படி சென்னையிலேயே சுவரை பார்த்துட்டு உட்கார்ந்து இருக்காங்கன்னு தெரியலை.”
பிரியாவின் பெயரை கேட்ட உடன் வைஜெயந்தியின் முகம் கனிந்தது. ஆனால் உடனேயே, அவள் ஏன் இங்கே வராமல் இருக்கிறாள் என்பதின் நினைவில் வாடவும் செய்தது.
“என்னப்பா விக்கி? பிரியா உன்னை விட சின்ன பொண்ணு, அவளுக்கு போய் மரியாதை எல்லாம் கொடுத்துட்டு? சரி
...
This story is now available on Chillzee KiMo.
...
போதே மனசுக்குள்ள சந்தோஷம் வரும். அவளோட பேச்சும், சிரிப்பும் தான் எனக்கு பெரிய துணை... நீளமா பூவை கட்டி வச்சுக்கிறது அவளுக்கு ரொம்ப பிடிக்கும்... நான் தான் அவளுக்கு தினமும் தலை வாரி விடுவேன்... தாவணி கட்டி, தலை வாரி, பூவோட அவளை பார்க்கும் போது அம்மனையே பார்க்குற மாதிரி இருக்கும்...”