(Reading time: 13 - 26 minutes)

03. பூ மகளின் தேடல் - ஜெயஸ்ரீ

மாலை நேரம்!

கொடைக்கானலின் குளிர் உடலை உடுருவி சென்றது... எந்த

பக்க மலையை பார்த்தாலும் பனி மூட்டம்...  சில நேரங்களில் மாலை சாரல் மண்ணை முத்தமிட்டது.. அந்த இள மாலை பொழுதில், ஸ்ரீ தன் தூக்கத்தை துறந்து எழுந்து வந்து... பால்கனி வழியாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்.. கருப்பு நிற ட்ராக் சூட் மற்றும் அவளுக்கு பிடித்த பிங்க் நிற டாப் அணிந்து இருந்தாள்.. குளிரின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தன் கைகளை பான்ட் பாக்கெட்டில் விட்டு கொண்டு குளிரையும் மழையும் ரசித்தாள்...  கோமதி ஸ்ரீ எழுந்ததை கண்டு அவளுக்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள்...

Poo magalin thedal

" தேங்க்ஸ் அம்மா.... லவ் யு... உம்ம்ம்மாஹ்ஹ்" என்று தாயை முத்தமிட்டு கொஞ்சினாள்...

" ஏய்.. விடு ஸ்ரீ.. எச்சில் பணிக்கிட்டு.... சரி போதும் கொஞ்சுனது... உனக்கு எங்கயாச்சும் வெளில போனுமா சுத்தி பார்கனுமா.... அப்பா கேட்டாரு... "

" ஓ அப்படியா... உங்க ஆத்துகாரர் கேட்டாரா... குறிஞ்சி ஆண்டவர் கோவிலுக்கு போலாம்னு குரு கிட்ட சொல்லிடு... "

"அடி கழுத.. அவர பேரு சொல்லியா  கூப்பிடுற.. குடு டி காபி கப்பை... அவர நானே பேரு சொல்லி கூப்ட மாட்டேன்... நீ எவ்ளோ தைரியம் இருந்தா பேரு சொல்லுவா...."

" ஐயோ கோமதிக்கு கோவத்த பாரு டா... ஹே கோமு இதுக்கெல்லாம் கொச்சிட்டு மகளோட காபி பிடிங்கிட்டு போறியே... கோமு நில் கோமு நில்.. உன் காபிகாக ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாதே கண்ணே..."

" கொடுமை உன்னோட... சீக்கிரம் ரெடி ஆகிட்டு கீழ வா... கோவிலுக்கு போலாம்னு நீ சொன்னதா உங்கப்பா கிட்ட சொல்லிடுறேன்... போ ஸ்ரீ மசமசனு நிக்காம போய் கிளம்பு..."

" உத்தரவு மகாராணி... அப்படியே ஆகட்டும்... " என்று கோமதியின் கன்னம் கிள்ளி சென்றாள் ஸ்ரீ... கோமதி கீழே இறங்கி வந்து கோவில் போகலாம் என்று ஸ்ரீ சொன்னதாக எல்லோரிடமும் சொன்னாள்.. சொல்லி விட்டு அவள் தங்கி இருக்கும் அறைக்கு சென்றாள்..  அங்கே குரு இருந்தார்...

"ஸ்ரீ இன்னும் வெளையாட்டு பொண்ணாவே இருக்கா... கொஞ்சுறதும் கிண்டல் பண்றதும்... உங்கள பேரு சொல்லி கிண்டல் பண்ணுறா..."

" ஹா ஹா... உனக்கு என்னோட பேரு சொல்ல முடியலன்னு பீளிங்காஹ் இருக்கா கோமு..."

" இது என்னங்க புருஷன் பெயரை யாராச்சும் சொல்லுவாங்களா... நான்லாம் சொல்ல மாட்டேன்...."

" அது எல்லாம் அந்த காலம் கோமு.. இப்போ எல்லாம் பேரு சொல்லி என்ன போடா.... வாடா... செல்ல பேரு பப்பி... பின்கி... இன்னும் என்னமோலாம் வச்சு இருக்காங்க..."

"இதுல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்.. ஏன் நீங்க யாருக்கும் பேரு வச்சு இருக்கீங்களா... அப்படி எதாச்சும் பேரு வச்சிங்க வேற ஒருத்தருக்கு அவ்ளோ தான் சொல்லிட்டேன் ஆமா... "

"கொச்சிகாதடி... நீ மட்டும் தான் எனக்கு செல்லம்... அம்மு... கோமு.. எல்லாம்.. " என்று சொல்லி கோமுவை அணைத்து கொள்ள முற்பட்ட பொழுது.. அறைவாசலில்... ஸ்ரீ.. மணி.. பிரகாஷ்... வேணி... எல்லாரும் நின்று கை தட்டினர்...

" வாவ் செம சூப்பர் லவ் சீன் அப்பா " என்று ஸ்ரீ கை தட்டினாள்...

"ஹே என் பொண்டாட்டி நான் கொஞ்சுவேன்... போங்க போய் கோவிலுக்கு கிளம்புற வழிய பாருங்க.."

"ஐயோ அப்பா நாங்க எல்லாரும் கிளம்பியாச்சு.. நீங்க தான் உங்க கோமு கூட டூயட் பாடிட்டு இருக்கீங்க... கிளம்பி சீக்கிரம் வாங்க.. வந்து உங்க டூயட்ஐ  தொடருங்க.. " என்று ஸ்ரீ வம்பு இழுத்தாள்...

"நாங்க ரெடி வாங்க போலாம்" என்று எல்லோரும் கிளம்பினர்...

ண் பிள்ளைகள் அனைவரும் வேட்டி சட்டை அணிந்து கொள்ள, பெண்கள் சாரீ உடுத்தி கொண்டனர்.. ஸ்ரீ மட்டும் தாவணி அணிந்து கொண்டாள்.. ரெட் கலர் மற்றும் கிரீன் கலர் இரண்டும் கலந்து வேலை பாடு கொண்ட தாவணி... எல்லாரும் அவளை பார்த்து பாராட்டினர்... வேணி சொன்னாள்...

" ஹே ஸ்ரீ... உனக்கு தாவணி செம சூப்பர்... உன் கலர்க்கு ரொம்ப பொருத்தமா இருக்கு... "

"போதும் போதும் ஐஸ் வச்சது வாங்க எல்லாரும் கிளம்பலாம்... " என்று எல்லாரும் கார் ஏறி சென்று கிளம்பி கோவில் அடைந்தார்கள்...

அன்று விநாயகர் சதுர்த்தி.. மிக விசேஷமாக இருந்தது... எல்லாரும் சாமீ கும்பிட்டு அங்கு சுற்றி பார்த்து விட்டு... கிளம்பினார்கள்...

அங்கு அஸ்வின் வீட்டில்!

மாலை எழுந்து வந்து எல்லாரும் தேநீர் அறிந்தி ஹாலில் உட்கார்ந்து அரட்டை அடித்து கொண்டு இருந்தனர்.. திடிரென்று எஸ்டேட் சார்க்( நாய் ) பலமாக குறைக்க ஆரம்பித்தது..

"அண்ணா நாய் ஏன் இப்படி சத்தமா கொலைக்குது.. யாராச்சும் வந்து இருக்காங்களான்னு போய் பார்த்திட்டு வரேன்.. "

" ஏய் மீரா பார்த்து போ" என்றான் அஸ்வின்..

வெளியே வந்த மீரா.. அவர்களுடைய  எஸ்டேட் காவல்காரன் மாடசாமி கூட நம்ம  ஸ்ரீ வாக்கு வாதம் பண்ணிக்கொண்டு  இருந்தாள்..

" ப்ளீஸ் அங்கிள்... ஒரே ஒரு ரோஸ் மட்டும் கொடுங்க.... நான் அதுக்கு காசு கூட தரேன்... ப்ளீஸ் அங்கிள் ரோஸ் தாங்க.. "

" ஏய் இந்தா பொண்ணு... ரோஸ் எல்லாம் எங்க சின்னையா ஆசையா வளர்த்து வறாரு... அத போய் கேட்குரியே...."

" ப்ளீஸ் அங்கிள்.. ஒன்னே ஒன்னு மட்டும் கொடுங்க.... உங்க சின்னயாக்கு தெரியாம...." என்று ஸ்ரீ கெஞ்சி கொண்டு இருந்தாள்..

" யாரு எனக்கு தெரியாம உங்களுக்கு ரோஸ் வேணுமா ???" என்று கேட்டவாறு அஸ்வினும், மீராவும் வந்து நின்றார்கள்...

(எப்படி அஸ்வின் வந்தான் அங்க……)

ஸ்ரீயை பார்த்த மீரா எதுவும் கேட்காமல் உள்ளே சென்று அஸ்வினை கண் ஜாடை கொண்டு அழைத்தாள்...

"எதுக்கு மீரா வெளிய வர சொன்ன???"

" அங்க பாரு... யாரு வந்து இருக்கானு... "

"எங்க சொல்ற..." என்று வாசல் பக்கம் திரும்பி பார்த்தான்... பார்த்தவன் இமைக்க மறந்தான்.. தாவணில இவ்ளோ அழகா இவ...

" அண்ணா ஜொள்ளு விட்டது போதும்... வா போய் என்ன பேசுறாங்கநு பாப்போம்... "

" ஹி ஹி வா போலாம்... " அங்கே சென்று பார்த்த பொழுது அவள் ஒரு ரோஸ் பூவுக்காக வாக்கு வாதம் பண்ணி கொண்டு இருந்தாள்... அப்பொழுது அங்கே சென்ற அஸ்வின்,

" யாரு எனக்கு  தெரியாம உங்களுக்கு ரோஸ் வேணுமா ???"

என்று அஸ்வினின் குரல் கேட்டதும்... திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்...

ஐயோ... இந்தா வளர்ந்து கெட்டவனா... இவனோட வீட்டுக்கா வந்தோம்.. போய்டலாம்...

" இல்ல நான் போறேன்... " என்று கிளம்பி விட்டாள்...  ஓடி போக கால் எடுத்து வைக்க போன பொழுது மீரா அவளுது கை பிடித்து இழுத்தாள்..

" இங்க பாருங்க இந்தா கை பிடிக்குற வேலை எல்லாம் வச்சுகாதிங்க.... கொன்னுடுவேன்..." அஸ்வின் தான் அவளது கை பிடித்தான் என்று எண்ணி அவ்வாறு பேசி கொண்டு இருந்தாள்..

" எங்க கொள்ளுங்க ஸ்ரீ என்னை..." என்று மீராவும் அஸ்வினும் சிரித்தார்கள்...

" சாரி நான் போறேன்... கையை விடுங்க... "

"ரோஸ் வேணும்னு தான வந்திங்க.... எடுக்காம போறீங்க ஸ்ரீ.. எங்க அண்ணா ஒன்னும் சொல்ல மாட்டாங்க பறிச்சிட்டு போங்க.. "

"இல்ல நான் போறேன்...  பாய் சாரி.. " என்று வெடுக்குனு மீராவிடம் கையை பிடுங்கி சென்று விட்டாள்... மீரா திரும்பி அண்ணனை பார்த்து சிரித்தாள்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.