04. பூ மகளின் தேடல் - ஜெயஸ்ரீ
ஸ்ரீ வீடு !
ஸ்ரீ ஒரே குழப்பமாக இருந்தாள் .
ஏன் மீரா வந்து ரோஸ் குடுத்திட்டு போறாங்க.. நான் வேணாம்னு தான நேத்து சொல்லிட்டு வந்தேன் என்று மனதினுள் கேள்வி கேட்டு கொண்டு இருந்தாள்… அவள் அமர்ந்து இருப்பதை பார்த்த கோமதி..
" ஏய் என்ன யோசிச்சிட்டு இருக்க இப்படி ?"
" ஒன்னும் இல்ல அம்மா"
"பொய் சொல்லாத... நீ மீரா பத்தி தான யோசிச்சிட்டு இருக்க.. "
"ஆமா அம்மா... ரோஸ் குடுத்திட்டு போனாங்க, ஒரு தேங்க்ஸ் கூட சொல்லல.... அதான் யோசிச்சிட்டு இருந்தேன்..."
" அதுக்கு என்னடா... குளிச்சிட்டு அவுங்க வீட்டுக்கு போய் நான் செஞ்ச பணியாரம் குடுத்திட்டு தேங்க்ஸ் சொல்லிட்டு வா .."
"அம்மா நானா... நான் எப்படி அம்மா அவுங்க வீட்டுக்கு..."
"ஏய் அவ உன் பிரண்டு தானா ...
அப்பறம் எதுக்கு தயங்குற... போய்ட்டு வாடா ... போ போய் குளிச்சிட்டு போய்ட்டு வா ..."
" சரி அம்மா " அவள் சரி என்று சொன்னதும் கோமதி எழுந்து சென்று விட்டார். ஸ்ரீ ரொம்ப நேரம் யோசித்து கொண்டு இருந்தாள் ... எப்படி போறது.... அங்க அவன் இருப்பானே அந்த வளர்ந்து கேட்டவன்.. ப்ச்.. அம்மா வேற போக சொல்லிடாங்க... போலாம் ஸ்ரீ... எவ்ளோவோ பண்றோம் இத பண்ண மாட்டோமா.. என்று மாடிக்கு சென்று கிளம்பா சென்று விட்டாள் ...
மீரா வீடு!
அண்ணன் பேசி எழுந்ததும்... மீரா வருத்த பட்டு அழுதாள் .. அந்த வீடு சமையல் செய்யும் லட்சுமி அம்மாள் ... அவளை சாப்பிட அழைத்தார். அவள் அதற்கு...
"எனக்கு பசி இல்ல.. அப்பறம் சாப்டுரேன் " லட்சுமி கீழே சென்று அவள் சாப்ட விரும்ப வில்லை என்று அங்கு அமர்ந்து இருந்த அஸ்வின்
கல்பனா , காஞ்சனாவிடம் சொன்னாள் ..
"இந்த பொண்ணு என்ன சாப்பாடு வேணாம்னு சொல்லுறா"
" டோன்ட் வொர்ரி... நான் போய் அழைச்சிட்டு வரேன்..." என்று அஸ்வின் மேலே ஏறி சென்றான்..
அங்கு மீரா மேகத்தை வெறித்தவாறு உட்காந்து இருந்தாள் .. ஆள் வரும் அரவம் கேட்டு ...
"எனக்கு பசி இல்ல அப்பறம் சப்டுரேன்.. தொந்தரவு பண்ணாதிங்க.. "
"மீரா " என்று அஸ்வின் அழைத்தான்..
" அண்ணா சாரி நீங்களா .. வாங்க சாப்ட போலாம் ..." என்று கீழே இறங்க எந்திரித்த பொழுது அஸ்வின் கை பிடித்து தடுத்தான் ...
" மீரா... நான் உன்ன ரொம்ப கஷ்டம் கொடுகுரேனா ... "
" அதெல்லாம் இல்ல அண்ணா "
"உண்மைய சொல்லு மீராகுட்டி "
" ப்ளீஸ் அண்ணா எனக்கு கல்யாணம் வேணாம்... "
" கல்யாணம் பண்ணிக்கமா இப்படியே எவ்ளோ நாள் தான் இருக்க போகுற.. "
"அண்ணா ப்ளீஸ்... ஐ நீட் சம் டைம்... யோசிச்சிட்டு சொல்லுறேன்.. "
"எவ்ளோ நாள் டைம் வேணும்?.."
"அட்லீஸ்ட் ஒன் இயர் அண்ணா ...??" என்று கேள்வியாக அண்ணனை நோக்கினாள் ...
"சாரி மீரா... ஒன் இயர் டைம் தர முடியாது.... உனக்கு ஒன் இயர் டைம் வேணும்னா எனக்கு கல்யாணம் வேணாம். அண்ட் ஸ்ரீயும் வேண்டாம் (மனதில் வலியோடு )... "
"ஐயோ அண்ணா ... ப்ளீஸ் ஸ்ரீ வேணாம்னு இன்னொரு தடவ சொல்லிடாதிங்க ... ஸ்ரீ தான் என்னோட அண்ணி ... அதுல எந்த மாற்றமும் இருக்க கூடாது ப்ளீஸ்.. "
"அப்படினா உனக்கு 2 வீக்ஸ் மட்டும் தான் டைம்.. இன்னைக்கு ஃப்ரைடே ... டூ வீக்ஸ் கழிச்சு வர ஃப்ரைடே எனக்கு நீ பதில் சொல்லணும்... ஒகே வா ???"
" ஒகே சொல்லுறேன்.. பட் என் முடிவு என்னவா இருந்தாலும் நீ உன் loveல இருந்து மாற கூடாது.. "
" சரி மாறல ... இப்போ சாப்பிட வரியா ... பசிக்குது மீரு ..."
" ஐயோ எனக்கும் பசிக்குது வாங்க சாப்ட போலாம் "
"குட் நீ கீழ இறங்கி போ.. நான் போன் பேசிட்டு வரேன்... " அவள் கீழே சென்றதும் தன் நண்பனுக்கு கால் செய்தான்..
" டேய் எங்கடா இருக்க ?? ஆபீஸ்ல இருக்கியா ??"
"...."
"உனக்கு ஒரு குட் நியூஸ்... மீரா 2 வீக்ஸ் கழிச்சு நல்ல பதிலா சொல்றேன்னு சொல்லிருக்கா ..."
"...."
"ரொம்ப அலையாத.. இத்தனை வர்ஷம் லவ் பண்ணல ... வெயிட் பண்ணு பொறுமையா... "
"..."
" ஒகே நான் சென்னை வந்ததும் உன்ன நேர்ல வந்து பாக்றேன் .. பாய் ... வைக்ரேன்.. அம்மாவை கேட்டத சொல்லு...." இரண்டு
பேரும் போன வைத்து விட்டனர் ... அஸ்வின் கீழே இறங்கி சாப்ட சென்றான்..
( ஹலோ இந்த friend தான் மீரா உடைய கண்ணன்.. இவரு யாரு என்னனு நெக்ஸ்ட் எபிசொடெல சொல்லுறேன்... ப்ளீஸ் நோ கோவம்.. )
ஸ்ரீ வீடு!!
"இன்னும் கிளம்பாம அங்க மேல என்ன பண்ணிட்டு இருக்க நீ... சீக்கிரம் கிளம்பி வரியா..." என்று கோமதி கத்தி கொண்டு இருந்தார்...
மாடியில் ஸ்ரீ குளித்து விட்டு வந்து துண்டை கட்டி கொண்டு தான் கொண்டு வந்த துணி உள்ள பையினை புரட்டி போட்டு வெகு நேர யோசனையில் இருந்தாள்...
"என்ன டிரஸ் போட்டு போகட்டும்... இப்படியே டவல் ஓடவா போறது... சீ கருமம்... என்ன ஸ்ரீ நீ.. அவுங்க வீட்ல பெரியவுங்க எல்லாம் இருப்பாங்க.. லூசு ஸ்ரீ... தாவணி போடலாம்னா அந்த வளந்து கேட்டவன் ஒரு மாதரி பாக்குறான்... இன்னைக்கு எதாச்சும் பண்ணட்டும் செத்தான் அவன் என் கைல.. சுரிதார் வேணாம்.. பெரியவுங்க இருக்காங்கனு வாட்ச்மன் வேற சொன்னாரு... எதுக்கு வம்பு நம்மள alien மாதரி பாக்கமா இருக்கணும்னா சாரீ தான் பெஸ்ட்... அப்பாடி ஒரு வழிய செலக்ட் பண்ணியாச்சு... "
ஒரு வழிய சாரீ கட்டி கீழே இறங்கி வந்த ஸ்ரீயை பார்த்து எல்லாரும் ஆச்சிரிய பட்டனர்..
"ஸ்ரீ சூப்பர்... வெயிட் போட்டோ எடுப்போம்" என்று எல்லோரும் தங்கள் போனில் புகைப்படம் எடுத்து கொண்டனர்... அனால் அந்த புகை படம் ஸ்ரீ வாழ்க்கையை புரட்டி போட போகிறது என்று யாருக்கும் தெரியாது...
"ஸ்ரீ சாப்ட்டு போ..." என்று கோமதி சொன்னார்...
" போய்ட்டு வந்து சாப்டுரேன்... " என்று சம்படத்தை(பாக்ஸ்) எடுத்து கிளம்பி விட்டாள்...
நேராக அஸ்வின்-மீரா நோக்கி நடந்தாள்...
அஸ்வின் வீட்டில் எல்லாரும் உணவு உண்டு கொண்டு இருந்தனர்... ஸ்ரீ அஸ்வின் வீட்டை அடைந்து மாடசாமி வாயில் கதவை திறந்து விட உள்ளே சென்றாள்... வாசிலில் போய் நின்று கால்லிங் பெல் அழுத்தினாள்...
"லட்சுமிஅம்மா யாருன்னு பாருங்க... " என்று காஞ்சனா சொன்னார்... லட்சுமி வாசல் நோக்கி நடந்து அங்கு நின்ற ஸ்ரீயை பார்த்து வினவினார்...
"யாரு நீங்க?"
" நான் மீரா பிரண்ட்... பேரு ஸ்ரீ..." என்று கேட்டு கொண்டு லட்சுமி உள்ளே சென்று அவள் வந்ததை சொன்னார்... அதை கேட்ட அஸ்வின் அவசரமாக நாற்காலியில் இருந்து எழுந்தான்... எல்லோரும் அவனை ஒரு மாதரி பார்த்தனர்...
" தண்ணி எடுக்க எந்திர்ச்சேன்" என்று சமாளித்து விட்டு உட்கந்தான்...மீரா வாசல் சென்று ஸ்ரீயிடம் பேசினாள்...
"ஹே ஸ்ரீ.. வாங்க வாங்க.. வாங்க வீட்டுக்குள்ள.. "
"இல்ல... நான் தேங்க்ஸ் சொல்ல தான் வந்தேன்.. ரொம்ப தேங்க்ஸ்.. அம்மா உங்களுக்கு பணியாரம் குடுத்து அனுப்புனாங்க... நான் கிளம்புறேன்.. " என்று அவள் கையில் சம்படத்தை திணித்து நகர முற்பட்டாள்... மீரா முறைத்தாள் ஸ்ரீயை பார்த்து... அவள் நின்று விட்டாள்...
" என்ன பாத்தா உங்களுக்கு எப்படி இருக்கு... வீட்டுக்குள்ள வர மாட்டிங்களா.... உங்க பணியாரம் வேணாம் எடுத்திட்டு போய்டுங்க... "
" ஐயோ மீரா ப்ளீஸ்.. வாங்கிகோங்க... "
" நான் வாங்கிகனுமா... வீட்டுக்குள்ள வந்து குடுத்திட்டு போங்க.." என்று அவள் கை பிடித்து இழுத்து சென்று விட்டாள்... அவளை பார்த்த அஸ்வின் குடித்த தண்ணியில் புரை ஏறினான்... தன் தலையில் அவனே தட்டி கொண்டு ஸ்ரீயை பார்த்தான்... ரெட் கலர் சாரீ.. அவ கலர்க்கு சும்மா நச்சுனு இருக்கு.. என்ன விட்ட அவல மடில துக்கி வச்சுகிட்டு கொஞ்ச ஆரம்பிச்சு விடுவேன்.. தோளில் இருக்குற மல்லிக பூ ஐயோ சும்மா ஆளை மயங்க வைக்குறா... அவ கழுத்து எலும்பு.. அவ கலர்க்கு இந்த சாரீ.. செம.. மயக்குறடி என்ன... சத்தியமா முடியலடி... இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாம்.. சொல்லுடி... என்னால உன்ன விட்டு இருக்கவே முடியாது.. அப்படி என்னடி வச்சுருக அந்த கண்ணுல... காது எல்லாம் soft ... அந்த ஆடுற ஜிமிக்கி... உன்ன அப்படியே கடிச்சு திங்கணும் போல இருக்குடி... என்று மனதில் கற்பனை குதிரை தறி கெட்டு ஓடி கொண்டு இருந்தது...