“ஏன் அப்படி பார்க்குறீங்கம்மா?”
“அன்னைக்கு விதவைன்னு சொன்ன உடனே வேண்டாம்னு சொன்னது நீ தானே? இப்போ சும்மா ஈகோவிற்காக எல்லாம் இப்படி பேசலையே நீ?”
“என்னை பத்தி உங்களுக்கு தெரிஞ்சது இவ்வளவு தானாம்மா? எனக்குன்னு மனசில சில ஆசை வச்சிருந்தேன் அதனால தான் அப்போ அப்படி சொன்னேன். ஆனால் பொண்ணு பார்க்க போன போது கூட, போட்டோவில் பார்த்த பிரியாவை மனசில் வச்சு தான் பார்த்தேன். அது தப்பு தான் ஆனால் பிரியா அப்போதே என் மனசுக்குள்ள வந்துட்டது எனக்கு புரியலை!”
“அப்போ ஆர்த்தி?”
“உங்க கிட்ட பிரியாவை விட சூப்பரான பொண்ணை கண்டுபிடிக்கிறேன்னு சொன்னேனே அதனால் வந்த விளைவு”
“அதை தான் சிம்பிளா ஈகோ ஈகோன்னு சொல்வாங்க”
“அப்படி தான் போல அம்ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிந்தது.
அம்மாவிடம் பேச முடியவில்லை, அப்பாவிடம் இருந்து விஷயம் வராது எனவே அண்ணனை தேடி சென்றாள். எப்போதும் துருதுரு என இருக்கும் விக்ராந்த கடந்த இரண்டு நாட்களாகவே வித்தியாசமாக இருப்பதாக அவளுக்கு தோன்றியது.
அவள் அவனின் அறைக்கு சென்ற போதும் எதோ யோசனையில் இருந்தான் அவன்.