“உங்களுக்கு என்னைப் பத்தியும் என் குடும்பத்தைப் பத்தியும் நல்லா தெரிஞ்சுடுச்சு இல்லை. ரொம்ப சந்தோஷம். நீங்க என்னைப் பொய் சொல்லி வர வச்சதுக்கு நான்தான் உங்க மேல கோவப்படணும். ஆனா நான் சும்மாப் போறேன்”
“என்ன மிரட்டறீங்களா ஸ்ரீதர். உங்களால என்ன பண்ண முடியும்”
“உங்க டிவி மேல என்னை பொய் சொல்லி வரவச்சதா வழக்குப் போட முடியும், செய்யட்டா?”, ஸ்ரீதர் பேச தொகுப்பாளர் பதில் பேச சிறிது நேரம் அந்த இடமே ஒரே அமளியாக இருந்தது. அங்கிருந்த கேமரா ஆட்கள் வந்து இருவரையும் சமாதானப்படுத்த ஸ்ரீதர் தொகுப்பாளரை எச்சரித்து விட்டு வெளியேறினான்.
“சாரி மேடம். என்னால நீங்க அவர்க்கிட்ட சண்டை போட வேண்டியதாப் போச்சு. நான் மன்னிப்பு கேட்டுக்கறேன் மேடம்”
“ஸ்ரீதர் பேசினதுக்கு நீங்க எதுக்கு மன்னிப்பு கேக்கறீங்க விமலா. அந்த ஆள் ஆழம் தெரியாம காலை விட்டுட்டாரு, மீடியாவைப் பத்தி தெரியலை. இனி இது உங்கப் பிரச்சனை இல்லை. எங்கப் பிரச்சனை. நாங்க பார்த்துக்கறோம். இன்னும் ஒரே வாரத்துல அவங்க மொத்த குடும்பத்தையும் உங்க வீட்டுக்கு வந்து உங்கக்கிட்ட மன்னிப்பு கேக்க வைக்கறோம்”, என்று கூற விமலா மறுபடியும் அவரிடம் நன்றி கூறி புறப்பட்டாள்.
ஒரு வாரம் எந்த பிரச்சனையும் இல்லாமல் செல்ல, ஸ்ரீதர் தான் கோவப்பட்டதால் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அந்த நிகழ்ச்சியை போடாமல் விட்டுவிட்டதாக நினைக்க, விமலாவும் அவர்களிடம் வந்த எத்தனையோ புகார்களில் இதுவும் ஒன்று போல, அதனால் அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று விட்டு விட்டாள்.
வெள்ளியன்று விடிந்த விடியல் விமலாவிற்கு கொண்டாட்டமாகவும், ஸ்ரீதருக்கு திண்டாட்டமாகவும் அமைந்தது. அன்று தொலைக்காட்சியில் அவர்கள் பங்கு பெற்ற நிகழ்ச்சியைக் காட்ட, அதைப் பார்த்த ஸ்ரீதரின் மொத்த குடும்பமும் அதிர்ந்தது. அதில் ஸ்ரீதர் தொகுப்பாளரையும், விமலாவையும் நக்கலாக பேசியது மட்டும் காண்பிக்கப்பட்டிருக்க மற்ற இருவரும் பேசியது எடிட் செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் ஸ்ரீதரை மொத்த வில்லனாக நினைக்கும் அளவிற்கு இருந்தது அவர்கள் செய்த எடிட்டிங் வேலை. அதைப் பார்த்த ஸ்ரீதரின் அம்மா அழ ஆரம்பிக்க, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ந்து நின்றான் ஸ்ரீதர்.
தொடரும்
{kunena_discuss:857}