05. யாதுமாகி நின்றாய் காளி - சத்யா
மீரா விக்டர் டீமில் ஒன்றாக கலக்கும் வரை , தன்னுடைய வேலை என்ன என்று புரியும் வரை, கொஞ்சம் தடுமாறினாலும் வேலையில் விக்டரின் திறனை பார்த்து அவனை பற்றிய தன்னுடைய முதல் அபிப்ராயத்தை மாற்றி கொண்டாள்.அவன் மேல் அந்த அலுவலக பெண்கள் பயித்தியமாய் இருப்பதை அவன் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதும் , எந்த விதமான அனாவசிய பேச்சுக்கள் அவனிடம் இல்லை என்பதும் மீராவிற்கு மிகவும் பிடித்தது.,அந்த கர்வம் ,கம்பீரம் அவளுக்கு அவன் மேல் இருந்த கோவத்தை அவளே அறியாமல் கரைத்து விட்டது.
ஷன்மு அண்ணா இபொழுது மீராவிற்கும் நெருக்கமான நண்பர் ஆகிவிட்டார். அவரிடம் மீரா பேசும் பொது எல்லாம் விக்டர் தனக்கு செய்த உதவி பற்றியும் , அவனுடைய மென்மையான மனம் பற்றியும் பேசி கொண்டே இருப்பார். மீரா கூட அவரிடம் ஷன்மு அண்ணா இன்னிக்கு என்ன கதை விக்டர் புராணத்தில் என்று கிண்டலாக கேட்பது உண்டு.,ஆனால் அவளுக்கு விக்டரை பற்றி கேட்டு தெரிந்ததை விட வேலை செய்த கடந்த 4 மாதத்தில் அவனை பற்றி நெறைய விஷயம் பிரமிக்க செய்தது, இது வரை அவர்கள் இருவரும் அதிகம் பேச வாய்ப்பு இல்லை என்றாலும் தினமும் காலை மாலை வணக்கம் சொல்லி கொள்வதும் , சின்ன சின்ன பாராட்டுதல்களை இருவரும் தங்கள் வேலையில் சிறப்பாக செய்தால் பகிர்ந்து கொள்வதும் வழக்கமானது.
ஒரு ப்ராஜெக்ட் விஷயமாக இருவரும் பெங்களூர் ஒரு நாள் பயணமாக செல்ல வேண்டி வர , விக்டர் மீராவிடம் அந்த வேலைக்கான சில முன் குறிப்புக்கள் கொடுத்து, நீங்க பயணம் செய்ய உங்க வீட்ல ஓகே சொல்வாங்களா இல்லை பயப்படு வாங்கண்ணா வேண்டாம் , நான் manage செஞ்சுக்கறேன் , பட் இந்த designing செஞ்ச நீங்க இருந்தா clientkku புரிய வெய்க்கறது easy அதான், wat do u say என்றான். மீரா யோசிக்காமல் நோ ப்ரொப்லெம் சார் நான் வரேன் ,பட் 1 கண்டிஷன் என்கவும் புரியாமல் அவளை விக்டர் பார்க்க , அவன் பார்வையை எப்போதும் போல் அசராமல் சந்தித்த மீரா நீங்க , நாம போயிட்டு வர வரைக்கும் smoke பண்ணாமல் இருந்தால் am all set to travel என்றாள். விக்டர்க்கு இது புடித்தது சவாலாக கேட்டது புடித்தது, அறிவுரை இல்லாமல் , அலட்டாமல் , அழகாக தன்னை அவள் கேட்டது புடித்தது. அவளை தீர்கமாக பார்த்தவன் சரி மீரா, ok deal accepted but on one condition from my side as well என்றான்.,மீரா அவனை போலவே பார்க்க ,விக்டர்க்கு சிரிப்பு வந்தது ...மீரா என்னை சார் மோர் என்று இல்லாமல் விக்டர் என்று கூப்ட வேண்டும் அவ்ளோதான் என் கண்டிஷன் என்றான். அந்த தோழமை மீராவிற்கு புடித்தது. ஓகே டன் என்றாள். மீரா நாம airport என் கார்ல போய்டலாம், ஓகேவா என்று கேட்க , மீரா ஓகே விக்டர் , நான் 4pm ரெடியா இருக்கேன் என்று சொல்ல அவன் ஓகே டன் என்று கிளம்பவும், மீரா தன் அறை நோக்கி செல்ல இதை இரு கண்கள் அவர்களை கொளுத்திவிடும் ஜ்வாலையுடன் பார்த்தது, வேற யாரு நம்ம வாயாடி வசந்தி தான், அவளுக்கு உடனேயே இதை யாரிடமாவது இன்னும் xtra மசாலா சேர்த்து சொல்லாவிடில் அன்றைய நாள் முடியாது ,உடனே தன்னுடய phone extensionil இருந்து இன்னும் இரண்டு மூன்று வம்பிகளை conference காலில் சேர்த்து,” தெரியுமா நம்ம விஸ்வாமித்ரர் இன்று மீராவுடம் பெங்களூர் பயணம், புகை புடிக்க வேண்டாம் என்று மீரா உருக , விஸ்வமிற்றார் சரி தாயே என்று அவளிடம் பதில் உருக இங்கு என்னால் இவர்கள் உருகல் தாங்கவில்லை , தேவையே இல்லாத பயணம் போல, எல்லாம் கம்பெனி பணம் இவர்கள் உருகளில் கரைகிறது..ஹ்ம்ம்ம்ம் இதுதான் இன்றைய பிளாஷ் நியூஸ் என்று சொல்ல,அணைத்து வம்பிகள் விட்ட பெருமூச்சிலும் , பொறாமை தீயிலும் அந்த அலுவலகம் சாம்பல் ஆகாதது அதிசியம்தான்.வசந்தி அந்த நியூஸ் சொல்லி வெய்க்கவும் மீரா அவள் இடம் வருவதற்கும் சரியாக இருந்தது. மீரா,வசந்தியிடம் தனக்கும் விக்டர்க்கும் வரும் 2 நாட்களுக்கு OD mark செய்ய சொல்லிவிட்டு விக்டர் அறை நோக்கி சென்றாள்.பிறகு ஏதோ தோன்றியவள் போல மறுபடியும் வசந்தியிடம் வந்து வசந்தி நீங்க நியூஸ் spread பண்ணுங்க வேண்டாம்னு சொல்ல , பட் நீங்க ரகசியமா பேசறத நினைச்சுகர்து என் desk வரை தெளிவா கேட்குது சோ பார்த்து ,நம்ம வாய்ஸ் எல்லாம் ரகசியத்துக்கு சரி வருமா..என்ன நீங்க இப்டி பண்றீங்க என்று சிரித்து கொண்டே சொல்லிவிட்டு அவள் அதற்கு மறுப்பு கூறும் முன் அங்கிருந்து நகர்ந்தாள். வசந்திக்கு அதிர்ச்சியாக இருந்தது, என்ன பெண் இவள் நானாக இருந்தால் இந்நேரம் அழுது அமர்களம் செய்து ஒரு வஷியாக்கி இருப்பேனே. சரியாய் மொக்கை பண்ணிட்டாளே ஹுஹ்ஹ்ஹ்ஹ்.,சரி விடு வசந்தி இது எல்லாம் வீரனுக்கு சகஜம் என்று அவள் அடுத்த வம்பிற்கு தயார் ஆனாள்.
மீரா லக்ஷ்மி அம்மாளிடம் தன்னுடைய பயணத்தை பற்றி சொல்லிவிட்டு அம்மா கொடுத்த முறுக்கு கொறித்து கொண்டே அம்மா விக்டர் வரேன்னு சொல்லிருக்கார், அவர் கூடவே நான் ஏர்போர்ட் போறேன் ஓகே வா, ஜஸ்ட் எ டே ட்ரிப் மோஸ்ட்லி நாளைக்கு அம்மு குட்டி இவேநிங் காபி குடிக்க நான் வந்துடுவேன், அதுக்குள்ள உன் புருஷன் கூட முடிஞ்ச அளவுக்கு ரொமான்ஸ் பண்ணிக்கோ ஓகே லக்ஷ்மி என்று அவரது கன்னத்தை தட்டவும் விக்டர் கார் ஹார்ன் ஒலிக்கவும் சரியாக இருந்தது. ஓகே அம்மா Bye” நான் வரட்டா “என்று தலைவர் ஸ்டைலில் சொல்லிக்கொண்டு தன்னுடைய சின்ன bag udan அவள் வெளியில் வர, விக்டர் காரில் இருந்து இறங்க வேண்டுமா , இல்லை காரில் இருந்த படியே Byeஆன்டி என்று சொல்ல வேண்டுமா என்று பட்டிமன்றம் தனக்குள் நடத்தினான். லக்ஷ்மி அம்மாள் அதற்குள் கார் அருகில் வந்து ஹலோ சார், have a nice journey, குழந்தை பார்த்துகோங்க என்று சொல்லவும் மீரா ஐயோ அம்மா போதுமே என்று சிணுங்கினாள். வந்த சிரிப்பை விக்டர் கஷ்டப்பட்டு அடக்கி கொண்டு sure ma என்று சொல்ல, லக்ஷ்மி அம்மாள் வாஞ்சையுடன், விக்டர் உங்களை பற்றி மீரா நெறைய சொல்லிருக்கா,கண்டிப்பா நம்ம வீட்டுக்கு சாப்டர மாதிரி ஒரு நாள் வாங்க என்று சொல்லவும் , விக்டர் திக்கு முக்காடி போனான், அந்த இயல்பான அன்பு அது நாள் வரை அவன் அறியாதது.,அந்த அம்மாவையே பார்த்து கொண்டே இருக்கனும் போல தோன்றிய என்னத்தை கஷ்டப்பட்டு திசை திருப்பி சின்ன தலை அசைப்புடன் கார் ஸ்டார்ட் செய்தான்,