(Reading time: 7 - 13 minutes)

 

ராம் மைதிலியிடம் “நீ ஏன் நேற்று என்னிடம் விழா முடிந்தபின் பேசவில்லை. மெசெஜிற்கு பதிலும் அனுப்பவில்லை” என்றான்.

“அது … ஒன்றுமில்லை. நீங்கள் விழாவில் பிசியாக இருந்தீர்கள் அதனால்தான்.”

“பொய் சொல்லாதே. என் மேல் கோபமா?”

“எதற்கு?”

“நான் உன்னிடம் என்னைப் பற்றிச் சொல்லவில்லை என்று,”

தலை குனிந்து கொண்டே “அப்படியெல்லாமில்லை” என்றாள்.

“இங்கே பார். உன்னிடம் என்னைப் பற்றிச் சொல்வதற்கு நேரமில்லை. முதல் நாள் நான் உன்னைப் பற்றித் தெரிந்து கொண்டேன். நேற்று பேசலாம் என்று நினைத்தேன் ஆனால் முடியவில்லை.”

“அதனால் என்ன? எனக்குத்தான் தெரிந்து விட்டதே. இதற்குத்தான் கூப்பிட்டீர்களா”

“இல்லை. நீ யாரையாவது காதலிக்கிறாயா? எனவும் திகைத்தாள் “என்னது?”

“பதில் சொல்லு” என்றான் ராம். “ஏன்?”

“சொல்கிறேன். நீ பதில் சொல் என்றான். “இல்லை”

“உனக்கு வரப்போகும் கணவனைப் பற்றி ஏதாவது அபிப்ராயம் இருக்கிறதா?”

“ஏன் எனக்கு மாப்பிள்ளை பார்க்கப் போகிறீர்களா?”

“அப்படித்தான் வைத்துக் கொள்ளேன்” என்றான் ராம்.

“ஹம்;;ம்… அப்படியெல்hமில்லை. நான் திருமணத்தைப் பற்றி இன்னும் எண்ணிப் பார்க்கவில்லை.”

“அப்படியென்றால் என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா?” என்றான் ராம்.

இப்பொழுது இன்னும் அதிர்ச்சியுடன் நின்றாள் மைதிலி.

தொடரும்

Episode 02

Episode 04

{kunena_discuss:887}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.