“ஓஹோ... இந்த நாய்ங்களை பொதுவா யார் கண்ட்ரோல் செய்றது?”
“அம்மா சார்... சின்னம்மா, திலீப் சார் சொன்னாலும் கேட்கும்ங்க... அப்புறம் வீட்டில அம்மாக்கு துணையா இருக்க ரோசிம்மா பேச்சையும் கேட்கும்ங்க... நானோ மத்த வேலை செய்றவங்களோ தேவை படும் போது ரோசிம்மா கிட்ட இன்டர்காம்ல பேசிட்டு போவோம்”
“சரி... அப்போ எப்படி நீங்க ரோஹினி இறந்த அன்னைக்கு அவ வீட்டை விட்டு போயிருப்பான்னு நினைச்சீங்க? நாய்ங்களை தாண்டி அவ போக முடியுமா என்ன?”
“ஹ்ம்ம்ம்.... நீங்க கேட்கும் போது தான் தோணுது. அன்னைக்கு காலையிலேயே எல்லா நாய்ங்களும் கட்டி போட்டு இருந்துச்சு... ரோஹினிக்காக அம்மாவோ இல்லை சின்னமாவோ கட்டி போட்டிருப்பாங்கன்னு நினைச்சேன்...”
தேன்னும் வினோத்தும் ஒருவரை ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
்.
எத்தனையோ முறை புகைப்படங்களில் பார்த்த முகம் என்ற போதும் நேரில் பார்க்கும் போது கை எடுத்து கும்பிட வைக்கும் தோற்றம். அந்த முகத்தில் இருந்த சாந்தம் எவரையும் கவரும்!
அத்தனை பெரிய வீட்டில் இத்தனை எளிமையாக இருக்க முடியுமா என்று எண்ண வைக்கும் விதத்தில் மிகவும் எளிமையாக இருந்தார்.