(Reading time: 17 - 34 minutes)

ன் கணவன் கோபத்தில் இருக்கிறான் என்று ஓரப் பார்வையிலேயே உணர்ந்துகொண்ட உமா கையில் கொண்டு வந்த பாலை அங்கிருந்த ஸ்டூலில் வைத்தாள். மனதின் நடுக்கத்தை மறைத்தவள் கட்டிலுக்கருகில் சென்று ஒரு போர்வையை எடுத்து உதறி கீழே விரித்தாள். அவனைக் கண்டுகொள்ளவேயில்லை. அவனைப் பார்க்கும் தைரியம் இருந்தால்தானே? போர்வையில் படுத்து கண்களை மூடிக்கொண்டாள்.

எதையுமே எதிர்பார்க்காமல் இருந்தால் அங்கே ஏமாற்றத்திற்கு இடமில்லை. அவளை ஏமாற்ற நினைத்தவன் தானே ஏமாந்து போனான். தெளிவான முடிவிற்கு அவள் வந்திருந்ததால் நிம்மதியாய் உறங்கினாள். அவளை எப்படி எல்லாம் கஷ்டப்படுத்தலாம் என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்ததால் அவனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை.

“ஷிட்!” என்று தரையில் காலால் உத

...
This story is now available on Chillzee KiMo.
...

கனவாக இருந்தது. அப்பாவின் ஆசைக்காக கொஞ்ச நாட்கள் தொழிலை கவனித்தான். அப்போதுதான் சந்தியாவைச் சந்தித்தான். ஆனால் தொடர்ந்து அவனுக்கு குடும்பத் தொழிலை கவனிக்க விருப்பமில்லை. அவர்களின் குட்டித் தேவதை ரம்யா. இன்னும் ஒரு வயது பூர்த்தியாகவில்லை. இன்னும் பத்து நாட்களில் முதல் பிறந்த நாள் வரப் போகிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.