அப்போது அங்கே வந்த சந்தியா அவன் என்ன பேசினான் என்று கவனிக்கவில்லை.
“இதப் பாரு. நான்தான் அண்ணியோட டிரஸ் ஈரமாயிருக்குன்னு கொடுத்தேன்.”
“அதுக்கென்ன இப்போ?”
“உன்கிட்ட எல்லாம் பேச வேண்டியிருக்கேன்னு என் தலைவிதியை நொந்துக்கிறேன்.”
“ஏன் என்கிட்ட பேசினா என்னவாம்?”
“நீ மனுசத்தனமாவா நடந்துருக்கே? புது இடம். இரவு நேரம். குளிர் வேற. எப்படி உன்னால் இப்படி நடந்துக்க முடிஞ்சது?”
“அதான் அவளே எல்லாம் சொன்னாள்தானே? என் மேல் என்ன குத்தமிருக்கு?”
“வேடிக்கை பார்க்க வெளியில் வர்றவங்க தன்னோட பேக்கையும் எடுத்துக்கிட்டு வருவாங்களா? நனைஞ்ச அத்தனை துணிகளையும் இப்பதான் பூரணி தோய்ச்சுப்போட்டா.”
“நான்தான் மழை வரும்னு தெரிஞ்ச உடன
...
This story is now available on Chillzee KiMo.
...
ோறேன்?” கதறினாள்.
“நீ சாகத் துணிகிற அளவுக்கு என்ன நடந்தது?” செல்லமாக வளர்த்த மகள் இத்தகைய முடிவு எடுத்தால் பெற்றோர் மனம் தாங்குமா?
“அத்தான் என்னை வேண்டாம்னு சொன்னதுக்கப்புறம் எப்படி என்னால் உயிர் வாழ முடியும்?” கண்ணீர் வழிந்தோட அவள் இக்கேள்வியைக் கேட்டதும் விக்கித்து நின்றனர்.