தூரிகா தானே போய் அந்த கேட்டை திறந்துவிடுவோமா என்று நினைக்கையில் அந்த நாய் அங்கே குப்பை கொட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் தொட்டியைப் பார்த்துவிட்டு அதன் அருகில் சென்று அதன் மேல் தாவி ஏறி சுவரின் அந்தப்பக்கம் குதித்துவிட்டது. தூரிகாவிற்கு அதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எந்த முயற்சியும் செய்யாமல் அமைதியாக இதைப் பார்த்திருந்த மற்றொரு நாயும் தானும் வெளியேறிச் சென்றது. தூரிகாவின் பக்கத்தில் நின்றிருந்த பெண்கள் அந்த நாய்களின் புத்திசாலித்தனத்தை மெச்சினார்கள்.
“பார்த்தியா! அந்த நாய் எவ்வளவு முயற்சி செய்தது?” என்றாள் ஒருவள்.
“போடி மக்கு. இன்னொரு நாயை பார்த்தியா? அலட்டிக்காம நின்னுச்சு. வழி தெரிஞ்சதும் போயிட்டு. அதுதான் புத்திசாலி.” என்றாள் ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ாம். ஆனால் செய்ய மாட்டேங்கிறாளே. ஜீவகன் மட்டுமல்ல. நந்தினியும் குடும்பத்தாரோடிருந்து விலகிதான் நிற்கிறாள். அப்பவாவது தன் கணவன் மனம் மாறாதா? என்று எண்ணுகிறாள் போலும்.
“இப்படி இழுத்துப் பிடிக்கனும்னு தேவையாம்மா. சொத்தையெல்லாம் எழுதிக்கொடுத்துட்டாலே எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துடும்மா.”