“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.”
ஆசிர்வதிப்பதுபோல் ரங்கநாதன் கூறவும் உமாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது. அதை ரசனையுடன் பார்த்திருந்தாள் சந்தியா. அவளுக்கு எப்படியும் அண்ணன் குணம் மாறும் என்று தெரியும். அது இவ்வளவு சீக்கிரத்தில் மாறியது அவளுக்கு மிகவும் சந்தோசமே.
“ஆமா அண்ணி. நீ ஏன் அழுதே?”
“உன்னைப் பார்த்ததில் வந்த ஆனந்தக் கண்ணீர்மா அது. அது புரியாம நீ என் மேல் கோபப் பட்டுட்டியே?” உமாவிற்கு முந்திக் கொண்டு பதில் சொன்னான் சிவனேஸ்வர். அவளிடம் அவன் எங்கே போகிறோம் என்று முதலில் கூறவில்லை. அதன் பிறகு சென்னைக்கு தான் மட்டுமாக போகப் போவதாக அறிவித்தான். அவன் மட்டும் போவதற்கு என்னை ஏன் அழைத்து வந்திருக்கிறார் என்ற யோசனையில் அவள் இருக்கும் போதே
...
This story is now available on Chillzee KiMo.
...
ை அழைத்துக் கொண்டு முதலில் தூரிகா தங்கியிருந்த வீட்டிற்கு வந்தாள்.
“இங்கே ஏன்? யாரிருக்கா?”
“சர்ப்ரைஸ்.” புன்னகையுடன் கூறினாள்.
அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தனர். கதவைத் திறந்த வடிவும் அவர்களை எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்களும் வடிவை எதிர்பார்த்திருக்கவில்லை.