தர்மராஜ் நடுத்தர குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு தன்னுடைய உழைப்பால் முன்னேறியவர். சாவித்திரியோ பரம்பரைப் பணக்காரி. அத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசு. அந்தச் செல்லமும் சேர்ந்து கொள்ள அவள் இளவரசியாகவே வளர்க்கப்பட்டாள். அவள் நினைத்ததுதான் நடக்க வேண்டும் என்பது அவர்கள் வீட்டில் எழுதப்படாத சட்டமாக இருந்தது. பருவ வயது வரும் வரையில் சாவித்திரியின் பெற்றோருக்கு எந்த வித கவலையும் இருக்கவில்லை. மகள் திருமண வயதை எட்டும் போது அவர்களுக்கு கவலை மனதை ஆட்டுவித்தது.
மகளும் பொறுப்பில்லாமல் இருக்கிறாள். அவளால் தொழிலைக் கவனிக்க முடியாது. அந்த அளவிற்கு திறமையாக அவளை வளர்த்திருக்கவில்லை. வரும் வரன்களும் மகளுக்கு சேரப் போகும் சொத்தைக் கணக்கில் கொண்டே வந்தனர். அவர்களால் தங்கள் ம
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லனும். நம்ம வீட்டில் எல்லாருக்கும் உமாவை பிடிச்சிருக்கு. அம்மாவும் மனதார அவளை ஏத்துக்கனும்னு ஆசைப்படறேன். ஏன்னா அம்மா மேல் எனக்கு எவ்வளவு பாசம்னு உங்களுக்கு தெரியும். அதான் உமாவை மனதார அவங்க ஏத்துக்கிற மாதிரி செய்யனும். அதுக்கு நான் ஒரு முடிவை எடுத்திருக்கேன்.” தீவிரமான குரலில் சொன்னான்.