“நந்தினி நீ கோச்சுக்காதேம்மா. இத்தனை நாள் உன் சாப்பாடுதானே சாப்பிட்டேன்.” அவளை சமாதானப்படுத்தினார்.
“ஐயா! எனக்கு ஒன்னும் வருத்தமில்லை. சொல்லப்போனா சுஜாம்மாவோட சமையலை இன்னிக்கு உங்களால்தான் டேஸ்ட் பண்ணப்போறேன். நானும் எவ்வளவு நாள்தான் என் சாப்பாட்டையே சகிச்சுக்கிறது.”
“ஏய் நந்து! இது உனக்கே நல்லாருக்கா? உனக்கே சகிச்சுக்க முடியாத சாப்பாட்டை நாங்க சகிச்சுக்கனுமா?” சிந்தனா அவள் முதுகில் தட்டினாள்.
“சகிச்சுக்க வேண்டாம் சிந்து. அதுக்கு ஒரு வழி இருக்கு.”
“என்ன வழி?”
“இனி நீயே சமைச்சுடு. பிரச்சினை தீர்ந்தது.” சிரிப்பை உள்ளடக்கிய குரலில் நந்தினி சொல்ல சிந்தனா ‘ஙே’ என்று விழித்தாள்.
இந்த வேடிக்கைப் பேச்சை விஸ்வநாதன் ரசித்துக
...
This story is now available on Chillzee KiMo.
...
சுஜயா ஆக வேண்டிய காரியங்களை கவனித்தாள். ஆனால் அவள் உணர்வுகள் என்ன என்று யாராலுமே புரிந்துகொள்ள முடியவில்லை. அவள் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை. இத்தனைக்கும் எல்லாரையும் விட அதிக பாசமாய் இருந்தவள். இருந்தும் அவள் கலங்கவில்லை.
அவருக்கு இறுதிச்சடங்குகள் சக்தி செய்தான்.