(Reading time: 23 - 45 minutes)

ப்னாவும் வரூனும் ஒரே ஸ்கூல்.... வரூன் பத்தாவது படிக்கும் போது மேத்ஸ்க்கு ட்யுஷன் போயிருக்காங்க... தனக்கு மேத்ஸ் சப்ஜக்ட் எடுக்கும் அதே சார் அவங்க ஏரியாவில் தான் இருக்காரு... அவர்க்கிட்ட ட்யூஷன் போன போது அதே ட்யூஷன்ல சப்னா ஏற்கனவே படிச்சிக்கிட்டு இருந்திருக்கா...

அப்போ அவ எட்டாவது படிச்சிக்கிட்டு இருந்திருக்கா... வேற வேற கிளாஸா இருந்தாலும்... எல்லோருக்கும் ஒரே நாள் மேத்ஸ் டெஸ்ட் வச்சிருக்காரு அந்த சார்... டெஸ்ட் எழுதின சப்னாவோ எதோ புக் பார்த்து எழுதியிருக்கா... அதை பார்த்த வரூன் தெரிஞ்ச பொண்ணா இருக்கவே... பார்த்து எழுதாதன்னு சார்க்கு தெரியாம அட்வைஸ் பண்ணியிருக்காங்க..... ஆனா அதை சார் பார்த்திருக்காரு... என்னன்னு கேட்டதுக்கு வரூனும் சப்னா இனி அப்படி பண்ணக் கூடாதுன்னு... சார்க்கிட்ட எல்லாம் சொல்லிட்டாங்க... சாரும் சப்னாவை திட்டியிருக்காரு...

இதை மனசுக்குள்ளேயே வச்சிருந்த சப்னா... ஸ்கூல்ல கோர்ட்டலி எக்ஸாம் அப்போ மேத்ஸ் எக்ஸாம்க்கு முன்னாடி வரூன் வீட்டுக்கு போய் வரூன்க்கு தெரியாம ஜாமட்ரி பாக்ஸ்ல ஏதோ பிட் பேப்பர் வச்சிருக்கா... அது தெரியாம வரூன் எக்ஸாம் அட்டண்ட் பண்ணியிருக்காங்க... சப்னா அந்த மேத்ஸ் டீச்சர்க்கிட்ட வரூனை மாட்டிவிட்ருக்கா... அந்த சாரோ பிட் பேப்பரை கண்டுப்பிடுச்சு எடுத்துட்டு... நீ இவ்வளவு நாள் இப்படி தான் பாஸ் பண்ணியான்னு கேட்ருக்காரு...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சகியின் "சதி என்று சரணடைந்தேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

அப்புறம் வார்னிங் கொடுத்து எக்ஸாம் எழுத வச்சிருக்காங்க... வரூனுக்கு ஒன்னும் புரியல... எக்ஸாம் முடிச்சு வந்த வரூனைப் பார்த்து சப்னா சிரிச்சிருக்கா... அப்புறம் ஏதோ சந்தேகம் வந்து அவங்க அம்மாக்கிட்ட கேட்டா ஏதோ டிக்‌ஷனரில மீனிங் பார்க்கனும்னு சப்னா உன்னோட ரூமுக்கு போனான்னு அவங்க அம்மா சொல்லியிருக்காங்க...

சப்னா தான் அதை பண்ணியிருப்பான்னு  டவுட் வந்து சப்னாக்கிட்ட கேட்டா... நீ என்னை அன்னைக்கு சார்க்கிட்ட மாட்டி விட்டல்ல... அதான் நான் அப்படி செஞ்சன்னு திமிரா பேசியிருக்கா... அதுல இருந்து சப்னா கூட வரூன் பேசறதில்ல...

ஸ்கூல்லயும் அடுத்து நடந்த எக்ஸாம்ல வரூனை செக் பண்ணியிருக்காங்க.... இதை அவமானமா உணர்ந்த வரூன் டென்த்ல நல்ல மார்க் எடுத்தும்... அந்த ஸ்கூல்ல தொடர்ந்து படிக்க விரும்பாம அண்ணா படிக்கிற ஸ்கூல்ல சேர்ந்திருந்திருக்காங்க... அப்புறம் சப்னாவும் அந்த இயர் முடிஞ்சதும் அவங்க அம்மா கூப்பிடதால மும்பைக்கே போய்ட்டாளாம்... இப்போ திரும்பவும் காலேஜ் இங்க படிக்க வந்திருக்காளாம்...

அந்த காரணத்தால் தான் சப்னா என்கிட்ட பேச வந்தப்போ  நான் பேசலன்னு வரூன் சொன்னதும்.... அண்ணா அதை சீரியஸா எடுத்துக்கல.... எதோ சின்ன வயசுல சப்னா பண்ண தப்பை  நீ இப்பவும் பெருசா எடுத்துக்கற.. இப்போ உன்கிட்ட ப்ரண்ட்லியா மூவ் பண்ணக் கூட நினைச்சிருக்கலாம் இல்லன்னு அண்ணா சொல்லுச்சு...

ஆனா வரூன் அதை ஏத்துக்கல... அவளைப் பத்தி உனக்கு தெரியாது... அவ திமிருப் பிடிச்சவ... என்ன வெறுப்பேத்த தான் வேணும்னே வந்து பேசறா... மத்தவங்க முன்னாடி என்ன இன்சல்ட் செய்ய முடியுமான்னு பார்ப்பா... ஏன் ப்ரண்ட்லியா மூவ் பண்ணனும்னா நினைச்சா வீட்டுக்கு வந்திருக்கலாமே...

அவ எதுக்கு திரும்ப சென்னைக்கு வந்திருக்கான்னு நினைக்கற... அங்க அவங்க அம்மா பேமிலில நிறைய பேர்... அதுல இவ ஏஜ் இருக்கவங்க கூடல்லாம்... போட்டி பொறாமை... யாராவது நல்லா படிச்சா இவளுக்கு பொறுக்காதாம்... இவளை விட அழகா இருந்தா பொறாமையில ஏதாச்சும் செய்வாளாம்... பர்ஸ்ட் ப்ரஃபரன்ஸ் இவளுக்கு கொடுக்கனும்னு நினைப்பாளாம்... அதான் திரும்பவும் இங்கையே அவளை அனுப்பிச்சிருக்காங்க.... இதெல்லாம் அவங்க பாட்டியே என்னோட அம்மாக்கிட்ட சொன்னதை  நானே கேட்டேன்...

சில குணம் பிறவியிலேயே இருந்தே இருக்கும்... அதை மாத்த முடியாது... சப்னாவும் அப்படிதான்... அவக்கிட்ட என்னால நல்லா பேச முடியாதுன்னு சொல்லிட்டாங்க... அப்போ பேசனது தான் எனக்கு தெரியும்... அப்போ நான் +1 படிச்சிட்டிருந்தேன்... அப்புறம் அந்த இயர் முடிஞ்சு லீவ்ல இருந்தப்ப அண்ணா ஒருநாள் கோபமா வீட்டுக்கு வந்துச்சு...

வரூன் நல்லவன் இல்ல... அவன் இப்படி நடந்துப்பான்னு நான் எதிர்பார்க்கல... அவன் இனிமே நம்ம வீட்டுக்கு வரக்கூடாது... நீங்க யாரும் அவன் கூட பேசக் கூடாதுன்னு அண்ணன் கோபமா பேசுச்சு... அப்பாவும் அம்மாவும் என்ன நடந்துச்சுன்னு கேட்டாங்க...

சப்னாவும் அண்ணாவும் லவ் பண்றதா அவங்க ரெண்டுப்பேர் போட்டோவும் ஒன்னா போஸ்டர் அடிச்சு காலேஜ் முழுக்க வரூன் ஒட்டியதாகவும்... இதனால சப்னா சூஸைட் அட்டண்ட் பண்ணதாகவும் அண்ணா சொல்லுச்சு... ஆனா அப்பா அம்மா இதை நம்பல வரூன் வந்தா கேட்டு தெரிஞ்சக்கலாம்னு அமைதியாயிட்டாங்க...

ஆனால் வரூன் வீட்டுக்கு வரவேயில்லை... அதுக்கப்புறம் நான் +2 ஜாயின் பண்ணியிருந்தேன்... என்னோட கிளாஸ்மேட் வரூன் பேமிலிக்கு தெரிஞ்சவ.. வரூன் உன்னைப் பார்க்கனும்னு சொன்னாரு... என்னோட வீட்டுக்கு வர்றீயான்னு கேட்டா.. அண்ணாவை நினைச்சுப் பயந்தேன்.. இருந்தாலும் அவ வீட்ல தானே மீட் பண்ணப் போறோம்னு அங்கப் போனேன்...

என்னாச்சு வரூன்... அண்ணா என்னன்னவோ சொல்லுதேன்னு கேட்டேன்... எல்லாத்துக்கும் காரணம் அந்த சப்னான்னு வரூன் சொன்னாங்க... என்ன நடந்ததுன்னும் சொன்னாங்க...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.