(Reading time: 23 - 45 minutes)

ரூன் சப்னா பத்தி சொன்னதெல்லாம் அண்ணா சீரியஸா எடுத்துக்கல போல... வரூன் கூட சப்னாவை பேச வைக்க அண்ணா ட்ரை பண்ணியிருக்கு... வரூன்க்கோ அண்ணா சப்னா கிட்ட பேசறது பிடிக்கல போல... எங்க இவங்க ரெண்டுப்பேரோட ப்ரண்ட்ஸ்ஷிப்ப அந்த சப்னா பிரிச்சிடுவாளோன்னு வரூன்க்கு பயம் வந்திருக்கு...

அண்ணாக்கிட்ட சப்னாவோட பேசவேண்டாம்னு வரூன் சொல்லியிருக்காங்க... அதோட விட்ருக்கலாம் அந்த சப்னாக்கிட்டயும் என் ப்ரண்டோட பேசாதன்னு சொல்லியிருக்காங்க... ஆனா அவ வேனும்னே ஏதாவது காரணம் வச்சு அண்ணாக்கிட்ட பேசியிருக்கா... சப்னாவே வந்து பேசறதால அண்ணாவாலையும் பேசாம இருக்க முடியல... இதைப்பார்த்த வரூன்க்கு கோபம் வந்து சப்னாக்கிட்ட நான் சொன்னாலும் கேக்காம என் ப்ரண்ட் கூட பேசற இது சரியில்லன்னு திரும்பவும் வார்ன் பண்ணியிருக்காங்க....

என்ன பிருத்வி கூட ப்ரண்டா இருக்கறதே உனக்குப் பிடிக்கலையா... நான் பிருத்வியை லவ் பண்ணப் போறேன் பாருன்னு வெறுபேத்தியிருக்கா... பிருத்வி உன்னை லவ் பண்ணமாட்டான்னு வரூன் நம்பிக்கையோட அவக்கிட்ட சொல்லியிருக்காங்க... அதுக்கு சப்னா அப்படியா... இந்த இயர் முடிஞ்சு நீங்க வெளிய போறதுக்குள்ள... நான் பிருத்வியை லவ் பண்றேன்... உங்க ப்ரண்ட்ஸ்ஷிப்பை பிரிச்சுக் காட்டறேன்னு சவால் விட்டுருக்கா... அது உன்னால முடியாதுன்னு வரூனும் சவால் விட்ருக்காங்க...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

அதுக்கப்புறம் அண்ணாக்கிட்ட வரூன் நீ சப்னாக்கிட்ட பேசறது எனக்குப் பிடிக்கலன்னு ஃபீல் பண்ணி பேசியிருக்காங்க.... சப்னாவும் அண்ணாக்கிட்ட பேச ட்ரை பண்ணியிருக்கா... ஆனா அண்ணா பேசல... இதுனால சீனியர்ஸ் இவக்கிட்ட வம்பு பண்றா போல அண்ணா முன்னாடி ட்ராமா போட்ருக்கா... அண்ணாவும் அவளுக்கு ஹெல்ப் செஞ்சிருக்கு... அப்போ அண்ணா சப்னாக்கிட்ட பேசறத பார்த்து வரூன் கோபப்பட்ருக்காங்க...

நீ இப்படி நான் சொன்னாலும் அவக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கல்ல... நீ அவக்கூட பேசாம இருக்க என்ன செய்யறேன்னு பாருன்னு கோபமா அண்ணாக்கிட்ட வரூன் பேசியிருக்காங்க... மறுநாள் பார்த்தா அண்ணாவும் சப்னாவும் இருக்க போட்டோ காலேஜ் ஃபுல்லா ஒட்டியிருக்கு... சப்னாவும் சூஸைட் அட்டண்ட் பண்ணிக்கிட்டதா தகவல்...

அண்ணாக்கும் வரூனுக்கும் ப்ரண்டா இருந்த ரவின்னு ஒருத்தங்க அண்ணாக்கிட்ட என்னன்னு சொல்லியிருக்காங்கன்னா... வரூன் தான் நீ சப்னாகிட்ட பேசாம இருக்கனும்னு இப்படி பண்ணிட்டான்... நான் இதெல்லாம் வேணாம்னு சொன்னாலும் கேக்கலன்னு சொல்லியிருக்காங்க.... அதக்கேட்டு வரூன் ரவிக்கிட்ட கோபப்பட்ருக்காங்க...

அப்புறம் எல்லோரும் சப்னாவை பார்க்க ஹாஸ்பிடல் போய்ருக்காங்க... சப்னா எக்ஸாம்க்கு படிக்கலன்னு தான் இப்படி செஞ்சுக்கிட்டதா அவங்க தாத்தாக்கும்... ஹாஸ்பிடல்லையும் சொல்லியிருக்கா... சப்னா அம்மாக்கு தெரிஞ்சா இதை பெரிய இஷ்யுவாக்குவாங்கன்னு அவங்க தாத்தாவும் இதை அப்படியே விட்டுட்டாரு...

அவங்க தாத்தா இல்லாத சமயம் அண்ணாவும் வரூனும் சப்னாவ பார்க்க போய்ருக்காங்க... அப்போ அந்த சப்னா அண்ணா முன்னாடி சீன் கிரியேட் பண்ணியிருக்கா... உங்கக்கூட பேசறது வரூன்க்கு பிடிக்கல பிருத்வி... நீ ஏன் அவன்கூட பேசற அவனை லவ் பண்றீயான்னு கேட்டுக்கிட்டே இருப்பான்... ஏன் லவ் பண்ணா என்ன தப்புன்னு கேட்டேன்... உன்னைப் பார்த்தாக்கூட பிருத்வி பேசாத படி என்ன செய்யறன்னு பாருன்னு மிரட்டிட்டு போனான்...

வரூன் இப்படி செய்வான்னு நான் நினைக்கல... நான் திரும்பவும் அந்த காலேஜ்ல எப்படி படிப்பேன்... என்னை ஏன் காப்பாத்தனாங்கன்னு அழுது இருக்கா... எங்க தாத்தாக்கிட்ட இதை நான் சொல்லலை... எங்க பேமிலிக்குள்ள இருக்க ப்ரண்ட்ஸ்ஷிப் கட்டாயிடும்... எங்க அம்மாக்கு விஷயம் தெரிஞ்சா என்ன சென்னைக்கே அப்புறம் அனுப்பமாட்டாங்கன்னு சொல்லியிருக்கா...

வரூனோ இவ பொய் சொல்றா... உன்னை லவ் பண்ணனும்னு இப்படி ட்ராமா போடறா.. நம்பாத பிருத்வின்னு அண்ணாக்கிட்ட சொல்லியிருக்காங்க... அந்த ரவியோ சப்னா சொன்னது தான் சரின்னு பேசியிருக்காங்க...

தற்கொலை வரைக்கும் போன சப்னா சொன்னது தான் சரியா இருக்கும்னு அண்ணன் நம்பியிருக்கு... அந்த சப்னா முன்னாடியே வரூன்கிட்ட நீ இவ்வளவு சீப்பா நடந்துப்பேன்னு நான் நினைக்கல... நாங்க லவ் பண்ணக்கூடாதுன்னு தானே இப்படி செஞ்ச... நானும் அவளும் லவ் பண்ணப் போறோம்... கல்யாணம் செஞ்சுக்கப் போறோம்ன்னு சொல்லிடுச்சு... இதுக்கு மேலே உன்கூட இருக்க ப்ரண்ட்ஸ்ஷிப்பை கட் பண்றேன்னு கோபமா சொல்லிடுச்சு...

காலேஜ்லயும் சப்னா சூஸைட்க்கு காரணம் வரூன் தான்னு தெரிஞ்சிடுச்சு... சப்னாவே அதை பெரிசு படுத்தலங்கறதால... காலேஜ் பேர் கெட்டுப் போய்டக்கூடாதுன்னு வரூனை வார்ன் பண்ணி அது ஃபைனல் இயர் என்பதால எக்ஸாம் எழுத அனுமதிச்சிருக்காங்க...

அதுக்கப்புறம் ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்த சப்னா வரூனைப் பார்த்து... இதெல்லாம் நான் போட்ட ப்ளான் தான்.. பார்த்தீயா பிருத்வியே என்ன லவ் பண்றதா சொல்லிட்டாரு... சீக்கிரமே நான் பிருத்விய மேரேஜ் பண்ணிக் காட்டறேன்... நீயும் பிருத்வியும் இனி திரும்பவும் ப்ரண்ட் ஆக முடியாதுன்னு மறுபடியும் சவால் விட்டுட்டுப் போயிருக்கா...

இதை வரூன் என்கிட்ட சொல்லிட்டு இது எல்லாம் சப்னாவோட ப்ளான்... அது தெரியாம நான் இதை செஞ்சிருப்பேன்னு பிருத்வி நம்பறான்னு சொல்லி வருத்தப்பட்டாங்க...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.