ஆனால் இரண்டு பேரும் காதலிப்பதாக வைஷு நினைத்தாள்... அதனால் அவள் அமைதியாகவே இருந்தாள்... இதில் அவள் படிப்பு முடிந்து சென்னைக்கு வரும்போது தான் நிகேதன் ஜானவி கல்யாணமும் நடந்தது... அப்போது சஞ்சயும் நீரஜாவும் பேசிக் கொள்ளவே இல்லை... அதன்பிறகு கல்யாணம் முடிந்ததும் நீரஜா சிங்கப்பூர் போக முடிவு செய்தாள்... நிக்கியும் ஜானுவும் எவ்வளவு சொல்லியும் அவள் கேட்கவேயில்லை.
நீரஜா சிங்கப்பூர் போனபோது தான் சஞ்சயும் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தான்... அவர்கள் இருவருக்குமிடையே என்ன பிரச்சனை என்று யாருக்கும் தெரியவில்லை... வைஷுவோ இருவரும் சண்டைப்போட்டு ஒருவரையொருவர் பிரிந்திருக்க வேண்டும்... இல்லை ஒருவர் காதலை சொல்லி மற்றவர் அதை நிராகரித்திருக்க வேண்டும் என்று நினைத்துக் க
...
This story is now available on Chillzee KiMo.
...
ா நினைச்சுக்க கூடாதுல்ல... அதான் அவ வரப் போறா என்றதும் நான் ஏர்போர்ட்க்கு வந்தேன்... மத்தப்படி நான் எந்த தப்பும் செய்யல... அதனால உன்னோட தங்கச்சி தான் என்கிட்ட பர்ஸ்ட் பேசனும்... இதை நான் சொன்னதா உன்னோட தங்கச்சிக்கிட்ட சொல்லு... நான் வீட்டுக்கு கிளம்பறேன் பை.." என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.