(Reading time: 23 - 45 minutes)

09. என்னுள் நிறைந்தவனே - ஸ்ரீ

Ennul nirainthavane

கரு கரு விழிகளால் ஒரு கண் மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கயில் ஒரு மின்னல் வந்து சாய்க்க
நீ ..ஒரு மல்லி சரமே
நீ ..இல்லை சிந்தும் மரமே
என் ..புது வெள்ளி குடமே
உன்னை தேடும் கண்கள்

..நீ தங்க சிலையா
வெண் ..நுரை பொங்கும் மலையா
மண் ..மதன் பின்னும் வழியா
உன்னை தேடும் கண்கள்

புது புது வரிகளால் என் கவிதை தாளம் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ

தாமரை இலை நீர் நீ தானா
தனி ஒரு அன்றில் நீ தானா
புயல் தரும் தென்றல் நீ தானா
புதையல் நீ தானா….”

ங்கள மாறி ஒருத்தர்தான் ராம் இந்த அஸைன்மென்ட்க்கு தேவை…அதனால தான் உங்க ரெண்டு பேரையும் ரெக்கமன்ட் பண்ணிணேன்,ஆல் த வெரி பெஸ்ட் பாய்ஸ்..என பேசிக் கொண்டிருந்தார் டிடெக்டிவ் ஏஜென்சியின் கெட் விஷால்..

தங்க்ஸ் சார்..கூடிய சீக்கிரம் நல்ல நியூஸோட வரோம்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "சதி என்று சரணடைந்தேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

இரவு 11 மணி,ராமும் பரணியும் ஹாஸ்பிட்டலில் வாங்கிய அந்த முகவரிக்குச் சென்றனர்..அந்த மருத்துவமனையிலிருந்து சிறிது தொலைவிலேயே இருந்தது..மிகவும் நடுத்தர குடும்பங்களே வசிக்கும் இடமாக இருந்தது..வீட்டு நம்பரை கண்டுபிடித்து அக்கம் பக்கம் பார்த்துவிட்டு மதில்சுவரை தாண்டி குதித்தனர்,.கையிலிருந்த கருவியால் பூட்டைத் திறந்து மெதுவாக உள்ளே நுழைந்தனர்..ஒரு ஹால்,கிச்சன் மற்றும் ஒரு அறையென சிறிய வீடுதான்..10 20நாட்கள் கவனிக்கபாடாமல் இருந்ததற்கான குப்பைகள் வீடு முழுவதும்…ஹாலில் பரணியும் மற்றொரு அறையில் ராமும் மொபைலின் டார்ச் வெளிச்சத்தில் தேட ஆரம்பித்தனர்..எவ்வளவு தேடியும் ஒன்றும் கிடைக்கவில்லை..இருவரும் வெறுத்துப் போய் கிளம்ப எத்தனிக்கையில்.ராமிற்கு கிச்சனில் தேடினால் என்னவென்று தோன்ற உள்ளே சென்று தேடினர்..கீழே முழுவதும் தேடி ஒன்றும் கிடைக்காமல்..மேலே லாப்டில் பார்க்கலாம் என பரணி நாற்காலியை போட்டு மேலே ஏறினான்..மேலோட்டமாக தேடிக் கொண்டிருந்தவன் கையில் ஏதோ ஊறுவதைப் போல் தோன்ற வேகமாய் கையை எடுத்த வேகத்தில் ஒரு பழைய ஹண்ட்பேக் வந்து ராமின் அருகில் விழுந்தது..அதை எடுத்து பிரித்தவனுக்கு கையில் கிடைத்தது ஒரு டைரி அவளுடையது தான்..ஒரு வேளை பழையதாக இருக்குமோவென அதன் பக்கங்களை திருப்பியவன் அதிர்ந்தான் ஏனெனில் ACPயிடம் அவள் பேசியதாக கூறப்படும் நாளுக்கு முந்தைய நாள் வரை எழுதப்பட்டிருந்தது..

பரணி இதுல நமக்கு எதாவது க்ளு கிடைக்கும்நு நெனைக்குறேன் வாடா போலாம்..என்றபடி இருவரும் அங்கிருந்து அகன்றனர்..அவர்கள் தங்கியிருக்கும் அறைக்கு வந்து ரெப்ரஷ் ஆகிவிட்டு அந்த டைரியை எடுத்து கொண்டு அமர்ந்தனர்..அவளின் அன்றாட நிகழ்வுகள் அனைத்தும் அதில் குறிப்பிட பட்டிருந்தன..என்னதான் அவள் உயிரோடில்லை எனினும் அடுத்தவருடைய டைரியை படிப்பது சங்கடமாய் இருந்தது..பரணி ராமிடம் டேய் குத்துமதிப்பா சில பக்கங்களை புரட்டுவோம் நமக்கு தேவையானது எங்கு இருக்கோ அந்த பக்கத்திலிருந்து தொடர்ந்து படிப்போம் என்றான்..ராமிற்கும் அது சரி என்றுபடவே ஆங்காங்கே ஒரு பக்கத்தையாய் படித்து பார்த்தான்..திடீரென்று ஒரு பக்கத்தில் “God will never forgive Them” என்று சற்று பெரிதாய் எழுதியிருந்தது..அதன் முந்தைய பக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தார்கள்..

எனக்கு மனசே சரியில்லை..அந்த குழந்தை எவ்வளவு அழகாயிருந்தது..அதைப் போய் கொல்ல எப்படிதான் மனசு வந்ததோ..அந்த பைல்ல பாத்துட்டு எனக்கு பேச்சே வரல..மருத்துவப் பணிங்கிறது தெய்வதுக்கு சமம்..அதப் போய் வியாபாரமாக்கிட்டாங்களே..அமர்நாத் சார் பொறுப்புல இருந்தவரை ஹாஸ்பிட்டல் எப்படியிருந்தது..எப்போ அவரோட பையன் பொறுப்பெடுத்தாரோ அப்போவே ஹாஸ்பிட்டல்க்கு அழிவுகாலம் ஆரம்பிச்சுடுச்சு..அதுவும் அந்த விநாயக் அவர்தான் மொத்தமா அதர்வாவை ஆட்டி வைக்குறது..என்னவோ இந்த தப்புக்கெல்லாம் காரணமானவங்களை கடவுள் கண்டிப்பா தண்டிப்பார்,”God will never forgive them”….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.