(Reading time: 7 - 14 minutes)

போடா.. சோடாபுட்டி.. “ அவன் கண்ணாடியை வைத்து கிண்டல் அடித்தாள்..

“ஹேய்.. இன்னும் ஒரு வருஷம் நாம மீட் பண்ண முடியாது.. ? அதுக்கு அப்புறம் நான் வரும்போது யார் யார் எங்கே எங்கே.. என்ன பண்ணிட்டு இருப்பீங்களோ .. எல்லாரும் இன்னிக்க பூரா என்ஜாய் பண்றோம்.. அதனாலே முதலில் ஒரு மால்க்கு போறோம்.. “ என்றபடி, அனைவரையும் அழைத்துக் கொண்டு மாயாஜால் சென்றார்கள்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம். அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்...

அங்கே கபாலி படத்திற்கு டிக்கெட் வாங்கி கொண்டு உள்ளே சென்றார்கள்..  தலைவர் படத்திற்கு சாதரணமாவே விசில் பறக்கும்.. அந்த ஸ்க்ரீனில் இருந்த இருநூறு பேரில், பத்து பேரே நடுத்தர வயதினரே.. அதே போல் பின் இருபதுகளில் ஒரு பத்து பேர் இருப்பார்கள்... மற்ற எல்லோரும் காலேஜ் students தான்.. ஒரே விசில் தான் .. ஆண், பெண் பேதமின்றி அனைவரும் ஓஹ்.. என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.. வெளியில் நிற்கும்போதே விசில் பறந்தது.. ஒரே செல்பி ... FB போஸ்டிங் ... என்று கும்மாளம் அடித்தனர். ...

சுபத்ராவும் தலைவர் ரசிகை என்பதால் ஆட்டம், பாட்டு , கூச்சல் எதிலும் குறைவு இல்லை.. பின்னால், முன்னால் யார் இருக்கிறார்கள் என்ற கவலை இல்லை.. துள்ளி திரியும் பருவம்.. கட்டுபடுத்தினாலும் திமிறிக் கொண்டு போகும்..

படம் முடிந்து food கோர்ட் செல்ல, அங்கேயும் இவர்கள் ஆர்ப்பாட்டம் அதிகம் தான்.. வருணின் ஏற்பாடு அது ... எல்லோரும் சேர்ந்து surprise கேக் ஆர்டர் செய்து சுபத்ராவை வெட்ட சொல்ல அவளும் மகிழ்ச்சியில் பங்கேற்றாள்..

கேக் வெட்டும் போது, ஜிகினா வெடிக்க வைத்து, அங்கே அமர்ந்து உள்ளவர்களை திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு கூச்சலிட்டனர்.. அதற்கு பின் ஒவ்வொருவர் முகத்திலும் கிரீம் தடவும் படலம்.. எதுவும் குறைவு இல்லாமல் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டங்க்ளோடு எல்லோரிடமும் விடை பெற்று வந்தாள்.

இவற்றை எல்லாம் , குறிப்பாக சுபத்ராவை இரண்டு கண்கள் பின் தொடர்ந்ததை அறியவில்லை.

அவளின் friends இருவரும் அவளை வழியன்னுப்ப வந்திருந்தனர்.. அவர்களிடம் தன் பெற்றோரை வந்து அடிக்கடி பார்த்துக் கொள்ளும்படி கூறினாள்.

கிருஷ்ணனோ “ஏண்டா.. இவங்களா பார்த்துக்க போறாங்க.. ? உன் ஒருத்தி கடியை தாங்கின இந்த நெஞ்சம் ரெண்டு ப்ளேடுகளை எப்படி தாங்க போகுதோ?” என்று நடித்து காட்ட,

“அங்கிள்... “ என்று கோரசாக கத்தின இருவரும் “உங்க பொண்ணுதான் எங்க ரெண்டு பேருக்கும் கடி ஜோக்ஸ் சொல்றதே .. அவ சொல்றத நாங்க follow பண்ணிட்டு இருக்கோம்”

“ஏண்டா.. நீயா இப்படி.. ? நான் கூட உன்னை கொஞ்சம் நல்லவன்னு நினைச்சுட்டேனே .. என்ன கொடுமை டா இது ?”

“அப்பா.. ..” என்று காலை உதைத்தவள் .. அவர்கள் இருவரையும் பார்த்து “ஹே.. கம்பெனி ரகசியத்த எல்லாம் வெளியிலே சொல்லாதீன்னு சொல்லியிருக்கேன்லே.. இனிமே உங்களுக்கு எந்த ஜோக்ஸ்ம் கிடையாது”

வருண், மகிமா இருவரும் “ஹே.. சுரா .. ப்ளீஸ் .. ப்ளீஸ்... உன் ஜோக்ஸ் வச்சுட்டுதான் ஊரில கெத்தா திரிஞ்சுகிட்டு இருக்கோம்... மாப்பு வாக்கதம்மா ஆப்பு.. ப்ளீஸ் “

“மன்னித்தோம் குழந்தாய்” என்ற ஆசீர்வாதம் செய்வது போல் கையை உயர்த்தினாள்.. இருவரும் அவளை அடிக்க வர, அவள் அப்பாவின் பின்னே ஒளிந்தாள்..  

ரயில்வே ஸ்டேஷன்இல் வைத்து இந்த ஆட்டம் நடைபெற , அன்றைக்கு மாலில் தொடர்ந்த அதே கண்கள் இன்றும் அவளை தொடர்ந்தது.

ட்ரைனிங் join செய்யும் அன்று காலையில் தன் தாய் தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்கி , ட்ரைனிங் அகாடமி உள்ளே சென்றாள்.. அவளை உள்ளே அனுப்பி விட்டு அவள் பெற்றோர் இருவரும் வெளியில் நின்றபடி பார்த்துக் கொண்டு இருந்தனர்.

இனி அவள் இங்கிருந்து இன்னும் ஒரு வருடம் வெளியில் செல்ல முடியாது .. அவர்கள் இருவரையும் திரும்பி திரும்பி பார்த்தபடி உள்ளே சென்றவள் யார் மீதோ மோதிக் கொண்டாள்..

“சாரி “ என்றபடி நிமிர்ந்தவள் அவன் முகத்தில் காணப்பட்ட கோபம் கலந்த வெறுப்பில் திகைத்து நின்றாள்.

தொடரும்

Episode 02

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.