(Reading time: 11 - 22 minutes)

09. அனு என் அனுராதா - VJ G

Anu en Anuratha

நீங்கள் அவர் நிலைமையை புரிந்துக் கொள்ளவேண்டும். என்ன இருந்தாலும் அவர் என்னுடைய அப்பா, நான் அவர் வயதை ஒத்தவரை கல்யாணம் செய்துக் கொள்வது அவருக்கு கஷ்டமாக இருக்கும்.

என்னைப் பொருத்தவரை, என் பத்து வயதிலிருந்து நீங்கள் என் கணவனாக தோன்றி, அதே நினைவில் வாழ்கின்றவள், இதை நாம் யாரிடம் சொன்னாலும் நம்மை பைத்தியம் என்று சொல்லுவார்கள். என் பத்து வயதில் இந்த மாதிரி எனக்குத் தோன்றுகிறது என்று சொன்னால் நம்பியிருக்க மாட்டார்கள், என்னை ஒரு சைக்காலாஜிஸ்ட்கிட்டே கூட்டிப் போயிருப்பார்கள். அவர்களும் பயந்து என்னையும் பயமூட்டியிருப்பார்கள். ஏதோ எனக்கே இது ஒன்று புரி படவில்லை, முதலில் நானும் ஏதோ கனவு என்றுதான் நினைத்தேன், பிறகு எனக்கு பதினைந்து வயது ஆனவுடன் எனக்கு தினமும் இதே நினைவுடன் இருக்கையில் என்னைப் பொருத்தவரை நான் உங்களுடன் வாழ்ந்திருக்கிறேன்..." என்று அவள் சொல்கையில் அவளை இன்னும் இறுக்கமாக அனைத்து அவள் கன்னத்தில், நெற்றியில் முத்தம் கொடுத்தார் சுந்தரம்.

"ம் ... மேலே சொல்லு" என்று ஊக்கப் படுத்தினார்.

“என் பதினேழு வயதில் எனக்கு உங்களை நேரில்பார்க்கவேண்டுமென்று ஆசை உண்டானது, பார்ப்போமா, இவர் யார், என் கணவர், எங்கே இருக்கிறார்? என்ற ஆசை துளிர் விட ஆரம்பித்தது.இந்த மாதிரி எனக்கு அடிக்கடி தோன்றும்,இன்று நீங்கள் நேரில் வரும்வரை, கண்ணனையே நினைத்து வாழ்ந்த மீரா மாதிரியே வாழ்ந்து விட முடிவு செய்து இருந்தேன் " என்றாள்.

"சரி நாம் திருமணம் செய்துக்கொள்ளலாமா? செய்துக்கொள்வதானால், உடனேயே செய்ய வேண்டும். ஏனென்றால் நான் ஏற்கனவே கிழவன் இன்னும் கால தாமதம் செய்யக் கூடாது." என்றார்.

"நீங்கள் சொல்வது சரியே, இனிமேலும் என்னால் உங்களை நினைத்துக் கொண்டு சும்மாவே இருக்க முடியாது." என்று சொன்னவுடன், " என்ன வேணும் சொல்லு சும்மா இருக்கவேண்டாம், என்ன செய்யவேண்டும் என்று தோன்றுகிறதோ செய்யேன் அதற்காகவே காத்திருக்கிறேன் என்று சுந்தரம் சொல்ல அவளுக்கு முகம் சிவந்தது, அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு, யாரோ என் கணவரை கிழவன் என்று சொன்னால் போல் இருக்கிறது?” என்று கேட்டாள்.

“அதற்கு சுந்தரம் வயதாக வயதாகத்தான் உணர்ச்சிகள் அதிகம் உனக்குத் தெரியாது நீ சின்னப் பெண்ணல்லவா?” என்றார்.

“அவள் சிரித்துக் கொண்டே, உங்களிடம் அப்போ ரொம்ப ஜாகிரதையாக இருக்க வேண்டும்போல் இருக்குது “என்று அவள் சொன்னவுடன்.

இத்தனை நாள் நீ ஏங்கியதற்கு சரியாக எல்லாவற்றிற்கும் ஈடு கட்டுகிறேன் கவலைப்படாதே” என்று சொல்லி அவள் உதட்டைத் தன் உதடுகளால் சிறைப் படுத்தினார் சுந்தரம்.

அவள் தன்னை மறந்து , அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுத்தாள். இருவரும் தங்களை மறந்தனர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

சுந்தரம் தன்னை மறந்து அனு! என் அனு! என்று முனு முனுத்தார்.

நீங்கள் நம் மகனைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே அவன் எப்படி இருக்கிறான். உங்களைப் போலவே இருக்கிறானா? என்று எல்லாக் கேள்விகளையும் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவரோ,” நம்மைப் பற்றி பேசவே இன்னும் நிறைய இருக்கு, நீ மகனைப் பற்றி கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டாய்” என்று கேட்டார் சுந்தரம்.

அவள் சிரித்துக் கொண்டே “ஆமாம், நாம தான் இப்போது சந்தித்துக் விட்டோமே இப்போ மகனைப் பற்றிதான் முக்கியம்” என்றாள் அவள், “நம்மைப் பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம்,” என்றாள்.

‘நம் மகன் ஆனந்தன் நல்லா இருக்கான், இப்பத்தான் மாஸ்டர்ஸ் டிகிரி சேர்ந்திருக்கான், அவனுக்கு நம் விஷயம் சொல்லம் எப்படி என்று யோசிக்கிறேன், அவன் அமெரிக்காவில் இருப்பதால் இது பெரிய விஷயமாய் இருக்காது என்று நினைக்கிறேன்’.

‘அவன் உன்னைவிட ஒரு வயது பெரியவன், அதான் எனக்கு கஷ்டமாயிருக்கு. ஒரு பக்கம் ஊர், உலகத்தைப் பற்றி கவலைப் படவேண்டாம் என்று நினைத்தாலும், இந்த மாதிரி விஷயத்துக்குப் பார்க்க வேண்டியிருக்கு' என்றார் சுந்தரம்.

“நீங்கள் சொல்லுவது சாதரணமாக மனிதர்கள் இப்படி வயது வித்தியாசத்தால் கல்யாணம் செய்துக் கொண்டால் ஊர் உலகம் பேசுவது சரி ஆனால் நானோ உங்களைக் கல்யாணம் செய்துக் கொள்ளவே, நாம் விட்டு விட்ட வாழ்வை தொடறவே இந்தப் பிறவி எடுத்து வந்திருக்கிறேன். அதுவும் இல்லாமல் கல்யாணம் செய்துக்கொள்ளப் போகும் நான் தான் இதைப் பற்றி கவலைப் படவேண்டும் அதனால் கவலையை விடுங்கள், நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன் தெரியுமா? இல்லையென்றால் என் மனசுல இருக்கிறத யார் கிட்ட எப்படி சொல்லுவது, அதனால் ஒன்றும் சொல்லாமல் கல்யாணமே செய்துக் கொள்ளாமல் இப்படியே இருந்துவிடலாமென்று நினைத்தேன்' என்றாள் ராதா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.