29. காதல் பின்னது உலகு - மனோஹரி
பவிஷ்யா மயங்கி விழுந்த அன்று இரவு அதியும் யவ்வனும் தானே அவர்களது மணி பெரியப்பாவைப் பார்த்து பேசிவிட்டு வந்தனர்…. இதில் திரும்பி வந்த இருவரும் சரியாய் வீடை அடையும் நேரம் அதிக்கு அவனது மில்லிலிருந்து அழைப்பு….. ஆக அவன் வீட்டுக்குள் வராமலே திரும்பிப் போய்விட்டான்…..
யவ்வன் மட்டுமாய் உள்ளே வந்தவன் தன் போர்ஷனை அடையும் போது….அவன் உள்ளே வரவும் அவனை இறுக அணைத்தது அவனது வினிப் பொண்ணு….ஹனிமூனிலிருந்த வந்த பின்பு அவன் இந்த வாசலை தாண்டி உள்ளே வரும் பொழுதெல்லாம் வரவேற்பு கொடுக்கலும் வாங்கலுமாய் ப்ரமாதாய் இருக்கும் தான்…. ஆனாலும் இன்றைய அணைப்பில் வித்யாசம் இருந்தது……
இது ஒரு வகையில் செல்ல அடைக்கலமும் சின்ன ஆறுதலும் தேடும் ரகம்….
மென்மையாய் அவளை தன் கைகளுக்குள் பொதிந்தவன் “ எல்லாம் சரியாகிடும் வினுமா….எப்டியும் பவி வீட்ல சரின்னு சொல்லிடுவாங்க…” அவள் மனம் எதைச் சுத்திக் கொண்டிருக்கிறது என்பதை அவனும் உணர்ந்தே இருந்தான்….
இவன் வார்த்தைகளில் அதுவரை குனிந்திருந்தவள் தலையை மட்டுமாய் சிறிது உயர்த்தி இவன் கண்களைப் பார்க்க…. நெற்றி சுருங்கிய சிறு தவிப்பு கலந்த பரிதாப பார்வை அது….
“அது….” என அதே தொனியில் தொடங்கியவள் பின் மீண்டுமாய் தலை குனிந்து அவன் மார்பில் சாய்ந்து…..” இன்னைக்கு பவி ரொம்பவுமே ஃபீல் பண்ணிட்டா….. அபையப் பார்க்கவும் ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு….” அவள் மனம் இன்னும் நிலை கொள்ளவில்லை….
“வினுப் பொண்ணு நீயே இப்டி பேசினா அப்றம் பவி என்ன செய்ய? பவிட்ட பேசுறப்ப பாசிடிவாவே பேசனும் சரியா…?” சொன்ன அவன் குரலில் அத்தனை இதம்….நம்பிக்கை
“ம்….” சின்னதாய் தலையை ஆட்டி வைத்தாலும் மீண்டுமாய் கண்களை மட்டுமாய் உயர்த்தி தன்னவன் முகம் பார்த்த அவள் பார்வையில் இன்னுமாய் ஏதோ ஒன்று….
அது என்ன என இவன் கேட்கும் முன்பே தொடங்கிவிட்டாள் அவள்….
“ அது இல்ல….ஒவ்வொருத்தரும் அவங்க விரும்புறவங்கள மேரேஜ் செய்ய என்ன பாடு படுறாங்க…..நான் மட்டும் எனக்கு பிடிச்சிறுந்தும் உங்களை ரொம்ப ஈசியா வேண்டாம்னு சொல்லிட்டேன்…..ஆனாலும் எப்டியோ எனக்கு நீங்க கிடச்சுட்டீங்க…..மிஸ் ஆகி இருந்தா என்னாகி இருக்கும்னு ஒரு ஃபீல் வந்துச்சு….” இப்போது இன்னுமாய் இவனுள் இடம் தேடினாள் அவன் மார்பில்….
குனிந்து அவள் நெற்றியில் செல்லமாய் சிறு முட்டல் செய்தவன் “அதான் நம்ம ரோவர் கேமிரா கம்ப்யூட்டர் ஈ மெயில்னு எல்லாம் சேர்ந்து என்னலாமோ செய்து நமக்கு மேரேஜ் செய்துவச்சுட்டே….இனிமே என்ன….” என்றபடி தன் கைகளுக்குள் சுருண்டிருந்தவளை இதமாய் இன்னுமாய் இறுக்கினான்….
அடுத்தும் தன்னவள் முன்நெற்றியில் முழுதாய் அரை நிமிடம் அழுத்தமாய் அவனது இதழ் தடம் பதித்தவன்….
“அப்போ நீ மேரேஜுக்கு சம்மதம்னு சொன்னதாலதான் நான் உன்னை வந்து அடுத்துப் பார்த்துப் பேச ரொம்ப ட்ரைப் பண்ணலை வினு….எதுனாலும் மேரேஜுக்கு பிறகு பேசி சரி செய்துக்க முடியும்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சு……இல்லைனாலாம் கண்டிப்பா உன்னை எப்டியாவது மீட் பண்ணி….என்ன விஷயம்னு பேசவச்சுனு …எப்டியும் நம்ம மேரேஜ் நடந்துறுக்கும்….” இப்பொழுது அவளை மொத்தமாய் கொத்தாய் அள்ளியவன்….
“அப்டில்லாம் உன்ன விட்டு கொடுத்துட்டு என்னால இருக்க முடியாது குட்டிப்பொண்ணு….. அன்னைக்கு நம்ம ஃபார்ம்க்கு வந்தியே அப்ப எனக்கு கன்ஃபார்மா தெரியும் உனக்கும் என் மேல முழு விருப்பம் இருக்குதுன்னு…..அதுக்கப்புறம் எதுக்காக உன்னை விடுறதாம்….”
இப்போது தன் இதழ்களால் ஒரு சிறு செயல் பாவை கன்னத்தில்….
தன் கோர்த்த கரங்களை அவன் கழுத்திற்கு மாலையாக்கியிருந்த மனையாள் இதில் கண் மூடி இன்னுமாய் இளகித் துவள….. ஆசையில் ஆரம்பித்தால் என்ன அன்பில் தொடங்கினால் என்ன இல்லற இளவேனிலில் இணைவுப் பூக்கள் எதிலிருந்தும் எப்போது வேண்டுமானாலும் மலரும்….
யவ்வனம் நிர்பயமாய் நிகழ்ந்தேற…..நிலவு இனிய தேன் சிந்தி செல்ல….
இப்போது இவளது இடக்கன்னம் இவளவன் மார்பிற்கு கொடுத்து……நிர்மலமாய்… நிறைந்த மனமாய்…. அடக்கப்படாத ஆகாயவிரிவாய்…. அசைவற்ற அலையாய் அவள் நிலை கொண்டிருந்த போது இரவு பெருமளவு கடந்து போயிருந்தது….
பிரிப்பதும் கலைப்பதும் பின் சேர்ப்பதுமாய் அவள் பின் தலை முடியை மென்மையாய் அளைந்து கொண்டிருந்ததை தவிர அவனிடமும் அப்போது வேறு செயலில்லை….
இடக்கையை தன் தலையணை ஆக்கி….வலக்கையால் வஞ்சி முடி கலைத்து…..மனதிலும் மார்பிலும் மங்கையை தாங்கி மௌனமாய் கண் மூடிக் கிடந்தவன் காதில் சின்னதாய் விழுகிறது கார் வந்து சேரும் சத்தம்…..
‘அதி வீட்டுக்கு வர இவ்ளவு நேரமாகிட்டா….??!!!’ இவனைப் போலவே அவளுக்கும் அது தான் தோன்றியது….
மெல்ல இவனை விட்டு எழுந்து கொண்ட நிலவினி அவர்கள் அறை ஜன்னலை திறந்து வெளியே பார்க்கும் போது அதி தெருவில் இறங்கி அனு வீடு நோக்கி ஓடிக் கொண்டிருந்தான்….